சென்னை மின்சார ரெயில்களில் ஏ.சி.பெட்டிகள்! தெற்கு ரெயில்வே திட்டம்!

சென்னை புறநகர் மின்சார ரெயில்களில் ஏ.சி.பெட்டிகள் இணைக்க திட்டமிட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதற்கான சோதனை விரைவில் தொடங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் போக்குவரத்துக்கு பெரும்பாலும் நம்புவது மின்சார ரெயில் சேவையைதான். வேகமான மற்றும் சவுகரியமான பயணத்திற்காக மின்சார ரெயில்களை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை பல லட்சத்தையும் தாண்டி அதிகரித்து வருகிறது. அதன்படி தெற்கு ரெயில்வேயின் ரெயில் கோட்டம் சார்பில், […]
5ஜி இணைய சேவை! தரவரிசையில் 47வது இடத்திற்கு முன்னேறிய இந்தியா!

5ஜி இணைய சேவை சர்வதேச தரவரிசையில் இங்கிலாந்து, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை பின்னுக்கு தள்ளிய இந்தியா 47வது இடத்திற்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் அதிவேக இணையசேவையான 5ஜி சேவையை ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தின. இதன் மூலம் இந்தியாவின் இணைய வேக செயல்திறன் 3.59 மடங்கு அளவிற்கு அதிகரித்துள்ளது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதன் தேர்வை அதிகப்படுத்திள்ளது. அதன்படி கடந்த ஆண்டு (2022) செப்டம்பர் மாதத்தில் வினாடிக்கு 13.87 எம்.பி.யாக கணக்கிடப்பட்டிருந்த சராசரி […]
ஓ.பன்னீர்செல்வத்தை அழைத்துள்ள பா.ஜ.க. தலைமை! டி.டி.வி. அடுத்த மூவ் என்ன?

ஓ.பன்னீர்செல்வத்தையும் டி.டிவி. தினகரனையும் பா.ஜ.க. தலைமை டெல்லிக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. அ.தி.மு.க. பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட நேரத்தில் எப்படியும் பா.ஜ.க. தலைமை தனக்கு அழைப்பு விடுக்கும் என்ற உறுதியான நம்பிக்கையில் இருந்தார் ஓ.பன்னீர்செல்வம். அ.தி.மு.க.வில் இருந்து குண்டுகட்டாக வெளியேற்றப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், எப்படியும் அக்கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியை வீழ்த்திவிட வேண்டும் என்றும் அ.தி.மு.க.வில் முக்கிய இடம் பிடிக்க வேண்டும் என்றும் தனது ஆதரவாளர்களுடன் […]
ஒரே நாளில் 12 பச்சிளங்குழந்தைகள் பலி! மகாராஷ்டிராவில் என்ன நடக்கிறது?

மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 12 பச்சிளங்குழந்தைகள் உள்பட 24 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் நான்டெட் மாவட்டத்தில் சங்கர்ராவ் சவான் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு மருந்து பற்றாக்குறை நிலவுவதாக ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 6 பெண் குழந்தைகள், 6 ஆண் குழந்தைகள் உள்பட 24 பேர் மருந்து பற்றாக்குறை காரணமாக […]
தயாரிப்பாளர் வி.ஏ.துரை காலமானார்! திரைப் பிரபலங்கள் அஞ்சலி!

பிரபல தயாரிப்பாளர் வி.ஏ.துரை உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள அவரது வீட்டில் நேற்று இரவு காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் சூர்யா, விக்ரம் இணைந்து நடித்த திரைப்படம் பிதாமகனை தயாரித்தவர் வி.ஏ.துரை. 69 வயதான இவர் என்னம்மா கண்ணு, லூட்டி, லவ்லி, பிதாமகன், கஜேந்திரா உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார். மேலும் ரஜினிகாந்த் நடித்த பாபா திரைப்படத்தில் எக்சிகியூட்டிவ் புரொடியூசராகவும் பணியாற்றியுள்ளார். கடந்த சில […]
பேருந்து நிறுத்தத்தில் பிளஸ்-2 மாணவன் படுகொலை! அதிர்ச்சி தகவல்!

பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்த பிளஸ்-2 மாணவன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கடலூர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள மேல்புளியங்குடி பகுதியைச் சேர்ந்தவர் ஜீவா. 17 வயதான இவர் அங்குள்ள பள்ளியில் பிளஸ்2 படித்து வந்தார். இன்று காலை வழக்கம் போல் பள்ளி செல்வதற்காக மேலபுளியங்குடி பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்பவரும் மாணவன் ஜீவாவுக்கு பக்கத்தில் வந்து நின்றார். திடீரென்று […]
அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு குவியும் பாராட்டு! என்ன செய்தார் தெரியுமா?

தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன், சாலையில் மயங்கிக் கிடந்த உணவு டெலிவரி செய்யும் ஊழியரை மீட்டு தனது சொந்த காரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததால் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தமிழகத்தின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக மா.சுப்பிரமணியன் செயலாற்றி வருகிறார். இவர் சென்னை மதுரவாயல் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள நேற்று (அக்.2) தனது காரில் சி.ஐ.டி. நகர் வழியாக சென்று கொண்டிருந்தார். அங்கு சாலையில் திடீரென்று கும்பல் கூடியிருப்பதை பார்த்து அது […]
அ.தி.மு.க. நிர்வாகி படுகொலை! ஓடவிட்டு வெட்டி சாய்த்த மர்ம கும்பல்!

சென்னையை அடுத்த வீச்சூரில் அ.தி.மு.க. பிரமுகர் மர்ம கும்பால் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் வீச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் வைதேகி. இவர் ஊராட்சி மன்ற துணைத் தலைவியாகவும், வீச்சூர் ஊராட்சி மேலவை பிரதிநிதியாகவும் பணியாற்றி வருகிறார். இவரது கணவர் சுமன் (வயது 38) அ.தி.மு.க.வில் சோழவரம் மேற்கு ஒன்றிய அண்ணா தொழிற்சங்க பேரவையில் செயலாளராக பதவி வகித்து வந்துள்ளார். மேலும் சுமன் ரியல் எஸ்டேட், […]
தெய்வத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவள் நான்! குஷ்பு பெருமிதம்!

நடிகை குஷ்பு தன்னை தெய்வத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவள் நான்தான் என்று பெருமிதத்துடன் பதிவு ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வைரலாகி வருகிறார். கேரள மாநிலம் திருச்சூரில் வடக்கும்புரம் ஸ்ரீவிஷ்ணுமாய கோவில் சென்ட்ராபின்னியில் அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீவிஷ்ணுமய சுவாமி, சிவன் மற்றும் பார்வதி தேவியின் தெய்வீகக் குழந்தை ஆகியோர் பிரதான தெய்வங்களை பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் விஷ்ணுமாயா கோவில் நிர்வாகம் பா.ஜ.க. தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும் நடிகையுமான குஷ்புவை அழைப்பு சிறப்பு […]
தவறான செய்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை! முதலமைச்சர் எச்சரிக்கை!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் 2 நாள் ஆலோசனை மாநாட்டில், பொய் செய்திகள் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசின் திட்டங்கள் அனைத்தும் கடைகோடி மனிதரையும் சென்றடைய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்றும், நாளையும் (அக்.3 மற்றும் அக்.4) கலெக்டர்கள், எஸ்.பி.க்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உடனான 2 நாள் ஆலோசனை மாநாட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்தி வருகிறார். நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற […]

