News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

அனைத்து மதத்தினரும் இதை செய்யுங்கள்! போப் பிரான்சிஸ் வேண்டுகோள்!

வருகிற 27ம் தேதி உலக அமைதிக்காக அனைத்து மதத்தினரும் இணைந்து பிரார்த்தனை செய்வோம் என்று போப் பிரான்சிஸ் அழைப்பு விடுத்துள்ளார். இஸ்ரேல்& ஹமாஸ் அமைப்புக்கு இடையிலான போர் தற்போது உச்சகட்டத்தை அடைந்துள்ளது. கடந்த 13 நாட்களை தாண்டி செல்லும் போரில்  இதுவரை ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களும், நூற்றுக்கணக்கான அயல்நாட்டினரும் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிலும் குறிப்பாக காஸாவில் உள்ள மருத்துவமனையில் ராக்கெட் விழுந்து 500 பேர் கொல்லப்பட்ட சம்பவம் சர்வதேச நாடுகள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை […]

வங்கதேசத்துடன் மோதும் இந்திய அணி! வெற்றிக்கணக்கு தொடருமா?

  உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய லீக் ஆட்டத்தில் இந்தியா, வங்கதேசத்தை எதிர்த்து விளையாட உள்ளது. இன்றைய ஆட்டத்திலும் இந்தியா தனது வெற்றியை தொடருமா என்று கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள்.   இந்தியாவில் உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் ஒன்றோடு ஒன்று மோதி தங்கள் பலத்தை வெளிப்படுத்தி வருகிறது. அதிலும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தது இந்திய அணி பாகிஸ்தான் அணியை 8வது […]

இன்று முதல் இலவசம்! தமிழக அரசு புதிய அறிவிப்பு!

நாவலூர் சுங்கச்சாவடியில் இன்று முதல் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் நேற்று (அக்.18) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறைமலைநகரில் கடந்த 2 நாட்களாக ஆய்வு மேற்கொண்டார். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள், துறை சாரந்த அரசு உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முடிவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ‘‘பெருங்குடி சுங்கச்சாவடியில் சாலை பயன்பாட்டு கட்டணம் வசூலிப்பது, இந்த […]

தனியார் மகளிர் விடுதிகள்! சென்னை மாவட்ட ஆட்சியர் புதிய உத்தரவு!

சென்னையில் செயல்பட்டு வரும் அனைத்து தனியார் மகளிர் விடுதிகள் மற்றும் இல்லங்கள் அனைத்தும் முறைப்படி பதிவு செய்யப்பட வேண்டும். மீறினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.   பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாநிலங்களில் இருந்தும் சென்னை வந்து தனியார் விடுதிகள் மற்றும் இல்லங்களில் தங்கி வேலைக்கு செல்லும் பெண்கள் ஏராளம். இதனால் சென்னையில் ஆங்காங்கே பல்வேறு தனியார் விடுதிகள் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு […]

‘லியோ’ திரைப்படத்தை முடக்க சதி! வானதி சீனிவாசன் பரபரப்பு குற்றச்சாட்டு!

திரைத்துறையில் தி.மு.க. ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதற்கு லியோ திரைப்படம் தான் உதாரணம் என்று வானதி சீனிவாசன் பகிரங்கமாக குற்றம்சாட்டி பேசினார்.   கோவை டாடாபாத் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நடுநிலைப்பள்ளியில் மியாவாக்கி முறையில் குறுங்காடுகள் வளர்க்கும் விருட்சம் என்ற திட்டத்தை கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன் தொடங்கி வைத்தார். மரக்கன்றுகளை நட்டு திட்டத்தை தொடங்கி வைத்த அவர் அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.   அவர் பேசும்போது, ‘‘விருட்சம் திட்டத்தின் மூலம் கோவை […]

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புதிய மேல்சாந்தி தேர்வு!

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புதிய மேல்சாந்தியாக பி.என்.மகேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இப்படிப்பட்ட தனித்துவம் வாய்ந்த சபரிமலை ஐயப்பன் கோவிலில் அர்ச்சகராக பணியாற்ற ஆண்டுதோறும் புதிய மேல்சாந்தி தேர்வு செய்யப்படுவது வழக்கம். அதன்படி தேவசம் போர்டு நேர்முகத் தேர்வு நடத்தி இறுதி செய்யப்பட்டவர்களின் பெயர்களுடன், ஐயப்பன் கோவில் கருவறை முன்பு சீட்டு குலுக்கல் முறையில் புதிய மேல் சாந்தியை தேர்வு செய்து வருகிறது. அப்படி […]

திருமண புடவை அணிந்து தேசிய விருது வாங்கிய நடிகை! யார் தெரியுமா?

சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வாங்கிய நடிகை அந்த விழாவில் தனது திருமணத்திற்கு அணிந்திருந்த புடவையை அணிந்து கொண்டது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.   நாட்டின் 69வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று டெல்லியில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்ட பாலிவுட் நடிகை ஆலியா பட் தன்னுடைய திருமணத்தின் போது அணிந்த கொண்ட புடவையுடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த புடவையின் மதிப்பு சுமார் 50 லட்சம் ரூபாய் […]

ஓ.பி.எஸ். என் பக்கம் தான்! மனம் திறந்த சசிகலா!

ஓ.பன்னீர்செல்வம் என்றுமே என் ஆதரவாளர்தான் என்று சசிகலா பகிரங்கமாக பேட்டி அளித்துள்ளது அ.தி.மு.க. மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க.வை ஒருங்கிணைப்பேன் என்றும் உண்மையான அ.தி.மு.க.வை கைப்பற்றுவேன்று என்று சூளுரைத்துக் கொண்டிருப்பவர்தான் சசிகலா. இவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி என்ற போதிலும் அவருக்கு பல்வேறு சமயங்களில் ஆலோசனைகளையும் கூறி வந்தார் என்பார்கள் அரசியல் விமர்சகர்கள். ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. தனது தலைமையில் இயங்கும் என்று சசிகலா அறிவித்து, அதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, […]

முட்டை பப்ஸ் சாப்பிட்ட 3 பேர்! என்ன ஆனது தெரியுமா?

ஈரோட்டில் முட்டை பப்ஸ் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   மாலை நேரங்களில் பப்ஸ், சமோசா, வடை, பஜ்ஜி உள்ளிட்டவற்றை பொது மக்கள் வாங்கி சாப்பிடுவதை வாடிக்கையாகவே வைத்துள்ளனர். அந்தவகையில் ஈரோடு அருகே நசியனூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரது மனைவி தாமரைச்செல்வி, தங்கை சிவகாமி மற்றும் அவரது 4 வயது மகள் தர்ஷினி ஆகிய3 பேரும் வில்லரசம்பட்டி பிரிவில் உள்ள பேக்கரியில் […]

ஹன்சிகா வைரல் பதிவு! Exclusive Clicks

குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை தொடங்கிய நடிகை ஹன்சிகா திருமணத்திற்கு பிறகும் பிசியாக நடித்து வருகிறார். பால்போன்ற வெள்ளை நிறம் கொண்ட நடிகை பட்டியலில் ஹன்சிகாவுக்கென்று தனி இடம் உண்டு.   அந்த வகையில் ஹன்சிகா, நடிகர் ஆதியுடன் இணைந்து நடித்த ‘பாட்னர்’ படம் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வெற்றி பெற்றது. இருப்பினும் தொடர்ந்து பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார் ஹன்சிகா.   இந்நிலையில் ஹன்சிகா தான் ஆசையாக வளர்த்து வந்த ‘புரூஸோ’ என்ற நாய்க்குட்டி உயிரிழந்துவிட்டதாக […]