News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

வேலை நிறுத்தம்! லாரி உரிமையாளர்கள் சங்கம் முக்கிய அறிவிப்பு!

நவம்பர் 9ம் தேதியன்று தமிழ்நாட்டில் லாரிகள் இயங்காது என்று லாரிகள் உரிமையாளர்கள் சங்கம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 6.50 லட்சம் லாரிகள் இயங்கி வருகிறது. டீசல் விலை உயர்வை எதிர்கொள்ளும் நிலையில் தமிழகத்தில் பசுமை வரியும் அதிகரித்துள்ளது லாரி உரிமையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி லாரிகளுக்கு பசுமை வரி ரூ.500ல் இருந்து 750 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல் காலாண்டு வரி 6 சக்கர லாரிகளுக்கு ரூ.3,596ல் இருந்து ரூ.4,550 ஆக உயர்ந்துள்ளது. […]

அவதூறு பேச்சு! பிரியங்கா காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்திக்கு தேர்தல் ஆணைம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநில சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அங்கு காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தேர்தல் பரப்புரையாற்றினார். அதன் கடந்த 20ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் தௌசாவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், பிரதமர் மோடி தேவ்நாராயண் கோவிலுக்கு சென்ற போது நன்கொடை […]

எங்களை புறக்கணித்தால் சிக்கல் ஏற்படும்! சந்திரசேகர்ராவ் எச்சரிக்கை!

தேர்தலில் எங்களை மக்கள் புறக்கணித்தால் அவர்களுக்குத் தான் சிக்கல் ஏற்படும் என்று தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர்ராவ் எச்சரிக்கை விடுத்துள்ளார். வருகிற நவம்பர் மாதத்தில் மிசோரம், ராஜஸ்தான், தெலங்கானா உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளன. மேலும் தேர்தல் முடிவுகள் வருகிற டிசம்பர் மாதம் 3ம் தேதி வெளியாக உள்ளது. இதனால் 5 மாநிலங்களிலும் ஆட்சியை பிடிக்க அனைத்துக் கட்சியினரும் தேர்தல்களத்தில் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். தெலங்கானா மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர்ராவ், […]

சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர்! எடப்பாடி பழனிசாமி உயர்நீதிமன்றத்தில் மனு!

எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மனுதாக்கல செய்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக அறிவிக்கப்பட்டு பின்னர் ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவி வகித்தார். சண்டை, சமாதான பேச்சுவார்த்தை என பல்வேறு கட்டங்களை தொடர்ந்து முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வமும் பொறுப்பு வகித்தனர். அதைத்தொடர்ந்து கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 66 இடங்களை கைப்பற்றிய […]

தமிழகத்தில் 6.11 கோடி வாக்காளர்கள்! வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இதில் தமிழகத்தில்  மொத்தம் 6 கோடியே 11 லட்சம் வாக்காளர்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அதன்படி இப்பட்டியலில் மொத்தம் 6.11 கோடி வாக்காளர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெண் வாக்காளர்கள் அதிகம் என்ற வகையில் மொத்தம் 3.10 கோடி பெண் வாக்காளர்களும், 3 கோடி ஆண் வாக்காளர்களும், […]

பாரா ஆசிய விளையாட்டு போட்டி! பதக்கங்களை குவிக்கும் இந்தியா!

பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா பதக்கங்களை குவித்து வரும் நிலையில் மேலும் 2 தங்கப்பதக்கங்கள் கிடைத்துள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கான 4வது பாரா ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் உள்ள ஹாங்சோவ் நகரில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று 5வது நாள் போட்டியில் இந்தியா பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வருகிறது. அதன்படி பாரா ஆசிய விளையாட்டு போட்டித் தொடரில் இந்தியாவுக்கு மேலும் 2 தங்கப்பதக்கங்கள் கிடைத்துள்ளன. பெண்கள் காம்பவுண்ட் ஓபன் வில்வித்தை மற்றும் ஆண்கள் 1,500 மீட்டர் […]

மீண்டும் இணைந்த தேசிய விருது கூட்டணி! ‘‘சூர்யா 43’’ அப்டேட் உங்களுக்காக!

‘சூர்யா 43’ திரைப்படத்திற்காக தேசிய விருது கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது, நடிகர் சூர்யா ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக விளங்கி வரும் நடிகர் சூர்யாவின் அடுத்த திரைப்படத்திற்கு தற்காலிகமாக ‘சூர்யா 43’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் தேசிய விருது வாங்கிய ‘சூரரைப்போற்று’ படக்குழுவினர் இணைந்துள்ளனர். அதன்படி இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் மீண்டும் சூர்யா கதாநாயகனாகவும், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் துல்கர் சல்மான், நஸ்ரியா பகத், விஜய் வர்மா […]

4 பேர் கொண்ட பா.ஜ.க. குழு தமிழகம் வருகை! தீவிர ஆலோசனை!

பா.ஜ.க.வுக்கு எதிராக தமிழக அரசு செயல்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய 4 பேர் கொண்ட குழு தமிழகத்திற்கு வருகைபுரிய உள்ளது. தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் பனையூர் இல்லம் முன்பாக நடப்பட்ட பா.ஜ.க. கொடிக் கம்பம் அகற்றப்பட்டு பா.ஜ.க. நிர்வாகிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் மட்டுமல்லாமல் மத்தியிலும் பற்றி எரிகிறது. இதனால் தமிழக அரசு பா.ஜ.க.வை வெறுப்புணர்வுடன் கையாண்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பா.ஜ.க. தொண்டர்கள் ஒடுக்கப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து […]

இஸ்ரேல்- ஹமாஸ் போர்! 8 ஆயிரத்தை கடந்த பலி!

இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போரால் இதுவரை 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி போருக்கு பிள்ளையார் சுழிபோட்டு தொடங்கி வைத்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் ராணுவமும் போர் நிலையை அறிவித்து தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. அதன்படி காசாவில் மருத்துவமனை, குடியிருப்பு பகுதிகள் என அனைத்து இடங்களில் இஸ்ரேல் ராணுவம் வான்வழி […]

தமிழகத்தில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

தமிழகத்தில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் அல்லது அக்டோபர் மாதத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி, இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி நடைபெறுவது வழக்கம். அதைத்தொடர்ந்து ஜனவரி மாதத்தில் இறுதி வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி இன்று தொடங்கியுள்ளது. அதன் முன்னோட்டமாக தற்போதைய நிலவரப்படி உள்ள வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது. அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மாவட்ட […]