மதுரையில் மேம்பால கட்டுமான பணிகள்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

மதுரையில் கோரிப்பாளையம் மற்றும் அப்போலோ சந்திப்பு ஆகிய இடங்களில் உயர்மட்ட மேம்பால கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116வது ஜெயந்தி விழா இன்று (அக்.30) கொண்டாடப்படுவதை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை சென்றுள்ளார். அங்கு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் முழு உருவ சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் சிலைக்கு கீழ் வண்ண மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முத்துமராமலிங்கத் தேவரின் […]
நடிகர் அர்ஜூன் மகள் ஐஸ்வர்யா- உமாபதி நிச்சயதார்த்தம்!

நடிகர் அர்ஜூன் மகள் ஐஸ்வர்யா மற்றும் நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் நிச்சயதார்த்தம் சிறப்பான முறையில் நடைபெற்றது. தமிழ் திரையுலகில் ஆக்ஷன் கிங் என்று அன்புடன் அழைக்கப்படுபவர் அர்ஜூன். இவர் முதல்வன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ரசிகர்களை பெற்றிருந்தார். அதைத்தொடர்ந்து இரும்புத்திரை உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகர் விஜய்யுடன் இணைந்து லியோ திரைப்படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களை மிரட்டியுள்ளார். இதற்கிடையில் […]
சென்னை தீவுத்திடலில் தொடங்கிய பட்டாசு விற்பனை!

சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை தொடங்கப்பட்டுள்ளதையடுத்து பட்டாசுகளை வாங்க பொது மக்கள் ஆர்வமுடன் குவிந்து வருகின்றனர். தீபாவளி பண்டிகை வருகிற நவம்பர் மாதம் 12ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி என்றாலே புத்தாடையும் பட்டாசும் தானே? இதனால் சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை நேற்று முதல் (அக்.29) தொடங்கப்பட்டுள்ளது. இந்த பட்டாசு விற்பனை வருகிற நவம்பர் 12ம் தேதி வரையில் 15 நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறும். அதன்படி தீவுத்திடலில் அமைக்கப்பட்டுள்ள 55 கடைகளில் […]
மரணதண்டடைனயில் இருந்து முன்னாள் வீரர்களை காப்பாற்றுவோம்! பா.ஜ.க. உறுதி!

கத்தார் நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்திய கடற்படை முன்னாள் வீரர்களையும் காப்பாற்றுவோம் என்று பா.ஜ.க. உறுதி அளித்துள்ளது. கத்தார் நாட்டில், அல் தஹ்ரா என்ற நிறுவனத்தில் இந்திய கடற்பனை முன்னாள் வீரர்கள் 8 பேர் பணியாற்றி வந்தனர். இவர்கள் 8 பேரையும் கடந்த 2022ம் ஆண்டு கத்தார் நாட்டின் ராணுவ ரகசியங்களை உளவு பார்த்ததாக குற்றம்சாட்டி கைது செய்தனர். மேலும் அந்நாட்டு நீதிமன்றம் 8 பேருக்கும் நேற்று முன்தினம் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது. […]
ஆளுநரை சந்தித்த பா.ஜ.க. மேலிடக் குழு! என்ன பேசினார்கள் தெரியுமா?

ஆளுநர் ஆர்.என்.ரவியை பா.ஜ.க. மேலிடக்குழுவினர் இன்று சந்தித்த போது பல்வேறு குற்றச்சாட்டுகளும் வேண்டுகோள்களும் முன்வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் பா.ஜ.க.வினர் தொடர்ந்து பழிவாங்கப்பட்டு வருவதாக தி.மு.க.வினர் மீது குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. அண்மையில் மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் பனையூர் வீட்டு முன்பாக பா.ஜ.க. கட்சிக் கொடி அகற்றப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பூதாகரமாக வெடித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 7 பா.ஜ.க.வினர் கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பா.ஜ.க.வுக்கு எதிராக தொடர்ந்து நடைபெறும் தாக்குதல் குறித்து […]
தீபாவளி பண்டிகை! நவ.9 முதல் 10,975 சிறப்பு பேருந்துகள்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகிற நவம்பர் 9ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 10,975 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துக் கழகம் தகவல் வெளியிட்டுள்ளது. பொங்கல், தீபாவளி, தொடர் விடுமுறை, பண்டிகைகளை கொண்டா சென்னையில் இருந்து பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அப்போது பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளை போக்குவரத்துக் கழகம் இயக்கி வருகிறது. அந்த வகையில் வருகிற நவம்பர் மாதம் 12ம் தேதி கொண்டாடப்பட உள்ள தீபாவளி பண்டிகைக்காக தமிழகம் முழுவதும் […]
கேரளாவில் பெண் பத்திரிகையாளரிடம் அத்துமீறல்! முன்னாள் பா.ஜ.க. எம்.பி. மீது வழக்கு!

கேள்வி கேட்ட பெண் பத்திரிகையாளரின் தோள் மீது கை போட்டு இழுத்து அநாகரீகமாக நடந்து கொண்ட நடிகரும், பா.ஜ.க. முன்னாள் எம்.பி. மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நேற்று (அக்.27) பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பா.ஜ.க. முன்னாள் எம்.பி.யும் நடிகருமான சுரேஷ்கோபி பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு அருகில் நின்று கொண்டிருந்த பெண் பத்திரிகையாளர் ஒருவர் சுரேஷ்கோபியிடம் கேள்வி ஒன்றை எழுப்பினார். அப்போது அந்த பெண் பத்திரிகையாளரின் தோளை […]
சந்திரபாபு நாயுடுவை கிண்டல் செய்த பிரபல இயக்குனர்! ஆந்திராவில் பரபரப்பு!

சிறையில் உள்ள ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை இயக்குனர் ராம்கோபால் வர்மா கிண்டலடித்து வெளியிட்ட புகைப்படம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர முன்னாள் முதலமைச்சரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு ஊழல் தொடர்பான வழக்கில் ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் ஆந்திர அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சந்திரபாபு நாயுடுவை விடுதலை செய்யக் கோரி ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இயக்குனர் ராம்கோபால் […]
அதற்கு தி.மு.க.தான் காரணம்! ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை தடுத்து நிறுத்தியது தி.மு.க.தான் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சென்னையில் பா.ம.க. சார்பில் சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பேசிய பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேசும்போது, ‘‘சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த கிடைத்த 3 வாய்ப்பையும் தி.மு.க. தான் கெடுத்துவிட்டது என்று பகிரங்கமாக குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த தி.மு.க.வுக்கு மனம் […]
ஆசிய பாரா விளையாட்டு போட்டி: 100 பதக்கங்களை குவித்த இந்தியா!

ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் இந்தியா 100 பதக்கங்களை குவித்து வரலாற்று சாதனை படைத்துள்ளது. ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தங்களின் திறமையை வெளிக்காட்டி பதக்கங்களை குவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆடவர் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரரான திலீப் மகாதேவ் கவித் தங்கம் வென்றார். இவர் இலக்கை 49.48 நொடிகளில் அடைந்து சாதனை படைத்தார். திலீப் மகாதேவ் கவித் பெற்றது இந்தியாவின் […]

