அப்பாவிக் குழந்தைகள் மரணத்துக்கு யார் பொறுப்பு. பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து

அதிகாலையில் எழும்பி பள்ளிக்குச் சென்ற குழந்தைகள் வேன் மீது ரயில் மோதிய சம்பவம் தமிழகத்தை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்று அதிகாலை கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதிய கோர விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்து கடலூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ரயில்வே கேட்டை கடக்க முயன்ற ஆச்சாரியா என்ற தனியார் பள்ளிக்கு சொந்தமான பள்ளி வேன் மீது திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் மோதியிருக்கிறது. முதலில் ரயில்வே கேட்டை மூடாமல் ஊழியர் தூங்கிவிட்டதால் வேன் தண்டவாளத்தை கடந்த போது விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கேட் […]
எடப்பாடி பயணத்தில் எங்கே நயினார் நாகேந்திரன்..? டூர் அலப்பறைகள்.

தேர்தல் வருகிறது என்றாலே நடைப்பயணம் செய்வது முக்கியத்துவம் பெறுகிறது. அந்த வகையில், ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற ஸ்லோகனுடன் அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தை கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தொகுதியில் இருந்து இன்று தொடங்கியிருக்கிறார். ராசியான கோமேட்டுப்பாளையத்தில் உள்ள வனபத்ரகாளியம்மன் கோயிலில் வழிபாடு நடத்தி தனது சுற்றுப்பயணத்தை தொடங்கினார் இ.பி.எஸ். எந்த ஒரு புதிய தொடக்கமாக இருந்தாலும் வனபத்ரகாளியம்மன் கோயிலில் இருந்து தொடங்கினால் […]
அன்வர் ராஜா பதவிக்கு மீண்டும் ஆபத்து..? பாஜக வில்லங்கப் பேச்சு

திராவிட மண்ணில் பாஜக காலூன்ற முயற்சி மேற்கொள்வதை எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதியாக எப்படிப் பார்க்கிறீர்கள்? என்ற கேள்விக்கு தமிழ்நாட்டில் காலூன்ற நினைப்பது பாஜக-வின் எண்ணம். அது ஒருக்காலும் நடக்காது என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து என்று தெள்ளத் தெளிவாகக் கொடுத்திருக்கிறார் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா. இந்த விவகாரம் மீண்டும் அதிமுக கூட்டணியில் குட்டையைக் குழப்பியிருக்கிறது. கடந்த 2021ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து அன்வர் ராஜா நீக்கம் செய்யப்பட்டிருந்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் என இருவரும் […]
திருமாவுக்கு நன்றி சொன்ன விஜய்… கூட்டணி உறுதியாகிறதா..?

செயற்குழுக் கூட்டத்தில் பரந்தூர் விமானநிலையத்துக்கு விஜய் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இது குறித்து எந்த அரசியல்வாதியும் கருத்து சொல்லாத நிலையில் திருமாவளவன் மட்டுமே வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து திருமாவுக்கு விஜய் போனில் நன்றி தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. திமுகவில் நெருக்கடி அதிகரிக்கும் நிலையில் விஜய்யுடன் கை கோர்ப்பது உறுதி என்கிறார்கள். இது குறித்து பேசும் விடுதலை சிறுத்தைகளின் ஆதரவாளர்கள், ‘’கூட்டணிக்கு எதிர்நிலையில் அரசியல் செய்பவர்கள் என்ன பேசினாலும் அதை வரவேற்கவே கூடாது என்ற நிலையில் தான் இன்றைய அரசியல் […]
எடப்பாடிக்கு இசட் பிளஸ் பாஜகவின் பாதுகாப்பு… திமுகவை மிரட்டும் எழுச்சிப் பயணம்

எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் ஆரம்பிக்கும் சூழலில் திடீரென அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதை பாஜகவின் ஆசிர்வாதம் என்றே அதிமுகவினர் நினைக்கிறார்கள். அதோடு எழுச்சித்தமிழரின் புரட்சிப்பயணம் சூப்பர் ரிசல்ட் தரும் என்று குதூகலத்தில் இருக்கிறார்கள். கடந்த சில மாதங்களில் மூன்று முறை வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. அது தொடர்பாக நடத்தப்பட்ட சோதனை மற்றும் விசாரணையில் அது வதந்தி என உறுதிபடுத்தப்பட்டாலும் பாதுகாப்பு கருதி அவருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் இசட் பிளஸ் பாதுகாப்பு […]
திருமாவை வெளியேற்றுகிறாரா செல்வப்பெருந்தகை.? கப்சிப் திமுக.. கொதிக்கும் விசிக

கூட்டணிக்குள் டாக்டர் ராமதாஸை கொண்டுவந்துவிட்டு, திருமாவளவனை வெளியே அனுப்ப வேண்டும் என்ற திமுக அசைன்மென்ட்டை செல்வப்பெருந்தகை மேற்கொள்வதாக விடுதலை சிறுத்தைகள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். டாக்டர் ராமதாஸை மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று செல்வப்பெருந்தகை தனியே பேசிவிட்டு வந்தார். இதையடுத்து இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்திருந்தார். திமுக கூட்டணியில் பாமகவை இணைப்பதில் தவறில்லை என்று கூறியிருந்தார். செல்வப்பெருந்தகையின் இந்த கருத்து திமுக கூட்டணியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும், எம்பியுமான […]
விஜய்யிடம் இப்படி அவமானப்படலாமா பாஜக..? நயினார் மீண்டும் நம்பிக்கை

விஜய் கட்சி ஆரம்பித்த நாளில் இருந்தே திமுகவையும் பாஜகவையும் எதிரிகள் என்று தெளிவாக அறிவிப்பு செய்துவிட்டார். ஆனாலும் பாஜகவினர் தொடர்ந்து கூட்டணி அழைப்பு கொடுத்துக்கொண்டே இருந்தார்கள். இந்த பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது போன்று பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று மிகத் தெளிவாக அறிவித்துவிட்டார். இதன் பிறகும் அவமானத்துக்கு அஞ்சாமல் பாஜக கூட்டணிக்கு இழுக்குமா என்பதே கேள்வியாக எழுந்துள்ளது. இது குறித்து பேசும் பாஜகவினர், ‘’விஜய்யிடம் நூறாவது முறையாக பாஜக அவமானப்பட்டிருக்கிறது… அண்ணாமலை என்றால் இப்படி ஒரு அவமானம் […]
விஜய் போராட்டத்துக்கு மிரளும் திமுக அரசு..? 10 ஆயிரம் கூட்டத்துக்கு தவெக ரெடி

தமிழக வெற்றிக் கழகம் தான் 2026 தேர்தலை தீர்மானிக்க போகிறது என்று திமுகவின் கூட்டணி கட்சித் தலைவரான சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் வெளிப்படையாகப் பேசியிருந்தார். திருப்புவனம் அஜித்குமார் அம்மாவை நேரில் சந்தித்து சலசலப்பைக் கிளப்பினார் அஜித். இந்நிலையில் வரும் ஞாயிறு நடத்தயிருந்த அஜித்குமாருக்கு நீதி கேட்கும் போராட்டத்துக்கு வழக்கம்போல் அனுமதி மறுக்கப்பட்டது பெரும் சர்ச்சையாகியுள்ளது. இதையடுத்து, தமிழக வெற்றிக் கழகத்தின் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என நீதிமன்றத்தில் தமிழக வெற்றிக் கழகம் […]
அன்புமணி கேள்விக்கு கப்சிப்…. மிரட்டப்பட்டாரா டாக்டர் ராமதாஸ்..?

வியாழக்கிழமை தோறும் பத்திரிகையாளர்களை சந்தித்து வருகிறார் பா.ம.க. தலைவர் ராமதாஸ். சமீபத்திய கூட்டங்களில் எல்லாம் அன்புமணி குறித்து அதிரடி குற்றச்சாட்டுகளை கூறிவந்த ராமதாஸ், நேற்றைய தினம் கப்சிப் என அமைதியாகியிருக்கிறார். டெல்லியில் இருந்து மிரட்டல் வந்ததா என்ற கேள்விக்குப் பதில் தெரியாமல் தடுமாறுகிறார்கள் ராமதாஸ் ஆதரவாளர்கள். பாமகவில் அரங்கேறி வரும் உட்கட்சி பூசல்கள் குறிப்பாக ராமதாஸ், அன்புமணி இடையிலான மோதல் போக்கால் நிர்வாகிகள் மாற்றம் இரன்உ பக்கமும் சூடுபிடித்து வருகிறது. விரைவில் தேர்தல் நெருங்குவதால் இருவரும் ஒன்று […]
அஜித்குமாரைத் தாக்கியது போலீஸா…. கூலிப்படையா..? அதிரவைக்கும் உடற்கூராய்வு சோதனை முடிவுகள்

தமிழகத்தை அதிரவைக்கும் திருப்புவனம் அஜித்குமாரின் முழு உடற்கூராய்வு சோதனை முடிவுகள் வெளியாகியுள்ளது. ஒரு கூலிப்படையினர் கூட இத்தனை கொடூரமாகத் தாக்கியிருக்க முடியுமா எனும் அளவுக்கு காட்டடித் தாக்குதல் நடந்தேறியுள்ளது. திருப்புவனம் அஜித்குமாருக்கு வெளியான உடற்கூராய்வு சோதனைப்படி அவருக்கு தலை முதல் கால் வரை 52 காயங்கள் இருத்திருக்கிறது ! மூளையில் இரத்தக்கசிவு, இதயத்தில் இரத்தக்கசிவு, கல்லீரலில் இரத்தக்கசிவு, விரல்கள் உடைந்து போயுள்ளன, மண்டையோடு உடைந்துள்ளது, இரண்டு காதுகளிலும் இரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. ஒரு கூலிப்படையால் கூட இப்படியொரு கொலையை […]

