News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

மாணவர்களுக்கும் 1,000 ரூபாய்… மூன்றாம் பாலினத்தவர், ஆட்டிசம் பிள்ளைகளுக்கு ஸ்பெஷல்…  அடடே ஆச்சர்ய பட்ஜெட்

பள்ளி மாணவ, மாணவியருக்கு ஏராளமான நலத்திட்ட உதவிகள் இன்றைய தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பதே சமூகநீதி என்ற வகையில் அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய சில திட்டங்களை பார்க்கலாம். மதி இறுக்கம் எனப்படும் ஆட்டிசம் குழந்தைகளுக்கு சரியான வழிகாட்டுதல் மையம், பள்ளிகள் கிடையாது. இந்த குறையை தீர்க்கும் வகையில் 25 கோடி ரூபாயில் உயர்திறன் மையம் அமைக்கப்படுகிறது. பழங்குடியின மாணவர்கள் 1,000 பேருக்குத் திறன் பயிற்சி வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. 7.5% உள் ஒதுக்கீட்டில் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் […]

கிராமங்களுக்கும் ரோடு, மீண்டும் சிங்காரச்சென்னை, காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் – தி.மு.க.வின் அதிரடி தேர்தல் பட்ஜெட்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று முதன்முறையாக பட்ஜெட் தாக்கல் செய்திருக்கிறார். இதுவரை இல்லாத வகையில் நேற்றைய தினமே தமிழ்நாடு பட்ஜெட்டிற்கான முத்திரை சின்னத்தை தமிழக அரசு வெளியிட்டிருந்தது. அதில், “தடைகளை தாண்டி.. வளர்ச்சியை நோக்கி” என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது. அதோடு, ‘மாபெரும் 7 தமிழ்க்கனவு’ என்று சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும் நல வாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமைவழிப் பயணம், தாய் தமிழும் […]

ஸ்டாலினுக்கு 50 ஆயிரம்… எடப்பாடிக்கு 20 ஆயிரம்..! விருப்ப மனு ரேஸில் ஜெயிக்கப்போவது யாரு..?

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடமிருந்து விருப்பமனு வாங்குவதில் எப்போதும் தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் பெரிய போட்டியே நடக்கும். ஜெயலலிதா இருந்த வரையிலும் தி.மு.க.வை விட அ.தி.மு.க.விலேயே அதிக எண்ணிக்கையில் விருப்பமனு பெறப்படும். இந்த நிலையில் வரும் 2024ம் ஆண்டுக்கு விருப்பமனு குறித்த அறிவிப்பை தி.மு.க.வே முதலில் வெளியிட்டது. அதில் பொதுத் தொகுதியில் போடியிட விரும்புபவர்கள் விண்ணப்பக் கட்டணம் 2 ஆயிரமும் டெபாசிட் தொகை 50 ஆயிரம் ரூபாயும் கட்டி மார்ச் 1ம் தேதிக்குள் தருமாறு அறிவித்திருக்கிறது. கடந்த தேர்தலில் […]

செல்வப்பெருந்தகையின் முதல் விக்கெட் யார்..? விஜயதாரணி, கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக போர்க்கொடி

தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு கே.எஸ்.அழகிரிக்கு அடுத்து யார் என்று நிறைய பேர் போட்டி போட்டார்கள். சீனியர்களுக்கு பதவி இல்லை என்று ஆரம்பத்திலேயே சொல்லப்பட்டுவிட்டது. மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, செல்லக்குமார், கார்த்தி சிதம்பரம், விஜயதாரணி ஆகியோர் முட்டி மோதினாலும், செல்வப்பெருந்தகைக்கு அந்த அதிர்ஷ்டம் கிடைத்திருக்கிறது. ராகுல் காந்தி இப்போது பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர், விவசாயிகள், பாட்டாளிகள், இன-மத-மொழி சிறுபான்மையினர் மற்றும் சமூகநீதியின் மீது நம்பிக்கையும் அக்கறையும் கொண்டவர்களுக்குக் கட்சியில் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். ஆகவே, பட்டியலினத்தைச் சேர்ந்த […]

விஜய்க்கு ரசிகர்கள் கோரிக்கை… பெயர் திருத்தம் போதாது… அப்பாவைக் கொண்டுவாங்க…

இந்த உலகிலேயே ஒரே ஒரு அறிக்கை மட்டும் கொடுத்து கட்சி தொடங்கிய முதல் நபர் நடிகர் விஜய் மட்டும் தான். அவரது தமிழக வெற்றி கழகம் பெயரில் தவறு இருக்கிறது, க் சேர்க்க வேண்டும் என்று பலரும் சொல்லிவந்தார்கள். இத்தனை நாளும் அமைதியாக இருந்த விஜய் திடீரென, க் சேர்க்கச் சொல்லிவிட்டார். எனவே இனி விஜய் கட்சி தமிழக வெற்றிக் கழகம் என்று அழைக்கப்படுமாம். ஆனால், அவரது ரசிகர்கள் கோரிக்கை வேறாக இருக்கிறது. ‘கட்சி விவகாரம் பேசுவதற்கும் […]

அதுக்குள்ள கனிமொழி தேர்தல் பிரசாரத்தை தொடங்கிட்டாங்க… தி.மு.க. செம ஸ்பீடு

கூட்டணிக்கு யாராவது கிடைப்பார்களா என்று அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் ஆள் தேடிக்கொண்டு இருக்கும் நேரத்தில் தி.மு.க.விலோ தேர்தல் பிரசாரத்தையே தொடங்கிவிட்டார்கள். மக்களவை தேர்தலை முன்னிட்டு திமுக அரசின் சாதனைகளை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில், உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக மூன்று நாட்களுக்கு பிரசார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அந்தவகையில் நேற்று நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை, கடலூர், சிவகங்கை, ஸ்ரீபெரும்புதூர், ஈரோடு, நாமக்கல், திருவண்ணாமலை ஆகிய 11 நாடாளுமன்றத் தொகுதிகளில் பொதுக்கூட்டம் […]

வன்னியரசுக்கு எம்.பி. சீட்…? விடுதலை சிறுத்தைக்குள் ஆதவ் அர்ஜூனுக்கு எதிராக போர்க்கொடி..

கட்சி ஆரம்பிக்கப்பட்டு இத்தனை ஆண்டுகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர் திருமாவளவன் மீது எந்தவொரு குற்றச்சாட்டும் வந்ததில்லை. அந்த நிலையில் இப்போது முதன்முறையாக பணத்துக்கு ஆசைப்பட்டு நேற்று கட்சிக்கு வந்த ஒரு நபருக்கு மிகப்பெரிய பதவியைக் கொடுத்து இத்தனை ஆண்டுகளாக கட்சியில் இருக்கும் வன்னியரசுவை அவமானப்படுத்திவிட்டதாக நிர்வாகிகள் கொதிக்கிறார்கள். பணம் இருந்தால் சீட்டு வாங்கிவிடலாம் என்ற லட்சியத்துடன் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குள் ஆதவ் அர்ஜூன் நுழைந்திருக்கிறார், அவருக்காக கள்ளக்குறிச்சி தொகுதியை திருமாவளவன் கேட்டு வாங்குகிறார் என்பதையே குற்றச்சாட்டாக […]

விவசாயிகளுக்கு எதிரா சட்டசபையில் பொய் சொல்லாதீங்க… தி.மு.க.வுக்கு அன்புமணி ராமதாஸ் கடும் எச்சரிக்கை

தமிழக சட்டப்பேரவையில் ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்கு 99% உழவர்கள் ஆதரவு என்று அமைச்சர் எ.வ.வேலு கூறியிருப்பது பொய் என்று கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார் அன்புமணி ராமதாஸ். செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்காக 3 ஆயிரம் ஏக்கருக்கும் கூடுதலான நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளன. 11 கிராமங்களில் வாழும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உழவர்களின் நிலங்கள் இதற்காக பறிக்கப்படவுள்ளன. இதைக் கண்டித்து 90% உழவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தங்களின் வாழ்வாதாரமாக திகழும் […]

10 கோடி ரூபாய்க்கு எம்.பி. சீட் விற்பனை செய்தாரா திருமாவளவன்? ஆதவ் அர்ஜூன் நியமனத்துக்கு கடும் எதிர்ப்பு

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக்குழுவில் ஆதவ் அர்ஜூனை  துணைப்பொதுச் செயலாளராக திருமாவளவன் நியமனம் செய்திருக்கிறார். 10 கோடி ரூபாய்க்கு எம்.பி. சீட் விற்பனை செய்துவிட்டதாக திருமாவளவன் மீது சிறுத்தைகள் கோபத்தைக் காட்டி வருகிறார்கள். . லாட்டரி சீட் விற்பனையாளர் மார்ட்டினின் மருமகனே ஆதவ் அர்ஜுனா. இவர் கடந்த 27.1.2024 அன்று தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணையவே செய்தார். அப்படி இணைந்தவருக்கு ஒரு மாதம் ஆவதற்கு முன்னரே 15.2.22024 அன்று நேரடியாக துணை பொதுச் செயலாளராக பதவி கிடைத்திருக்கிறது. […]

திருச்சி வேட்பாளர் துரை வைகோ.?. திருநாவுக்கரசருக்கு சீட் காலி

தி.மு.க.வில் எந்தக் கட்சிக்கு எந்த தொகுதி என்பது குறித்து தீவிர ஆலோசனை நடந்து வருகிறது. அந்த வகையில் வைகோவின் ம.தி.மு.க.வுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மதிமுக சார்பாக ஈரோடு தொகுதியில் கணேச மூர்த்தி போட்டியிட்டார். இந்த தொகுதியில் கணேசமூர்த்திக்கு கடுமையான எதிர்ப்பு இருப்பதால், அவருக்கு சீட் இல்லை என்று தி.மு.க. முடிவு செய்திருக்கிறது. எனவே, இந்த தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்குவதற்கு தி.மு.க. முடிவு செய்திருக்கிறதாம். அதேநேரம், […]