News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

உதயநிதிக்கு துணைமுதல்வர் பதவி எப்போது? ஸ்டாலினே சொன்ன பதில் இது.

முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்வதற்கு மத்திய அரசு அனுமதி கொடுத்திருக்கிறது. இம்மாதம் அமெரிக்கா செல்வதற்கு முன்பாக உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்று பேச்சு பலமாக அடிபடுகிறது. அதோடு அமைச்சரவை மாற்றமும் இருக்கும் என்று தெரிகிறது. இந்த நிலையில் இன்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்த நேரத்தில், ‘அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இந்த கோரிக்கையை முதலமைச்சர் பரிசீலிப்பாரா?’ என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு முதலமைச்சர் […]

போராடிய மாணவர்கள் கொன்று குவிப்பு. ரத்த ஆறு ஓடும் வங்கதேசத்துக்குப் போகாதீங்க…

ஆளும் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்திருப்பதால் நாடெங்கும் ரத்தக்களறியாகி வருகிறது. காவல் துறையும் போராட்டக்காரர்களும் நடத்திவரும் போராட்டத்தில் ஏகப்பட்ட அப்பாவி மக்களும் பலியாகிவருகிறார்கள். நாடு முழுக்க ரத்த ஆறு ஓடுகிறது. ஆகவேவங்கதேசத்துக்குப் பயணிக்க வேண்டாம் என்று இந்திய அரசு எச்சரிக்கை செய்திருக்கிறது. கடந்த 1971-ம் ஆண்டு வங்க தேசத்தின் விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்த படைவீரர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற நீதிமன்றத்தின் […]

மசுரு, பிசிறு சீமானுக்கு சவுக்கு சங்கர் பாணியில் ட்ரீட்மென்ட்? மீண்டும் சீறிய விஜயலட்சுமி

சென்னையில் தி.மு.க. அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் நாம் தமிழர் சீமான் எல்லை மீறி பேசிவிட்டதாக பலத்த கண்டனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, மசுரு, பிசுருன்னு பேசுவேன் அதனால உனக்கென்னடா என்று காவல் துறை எஸ்.பி. வருண்குமார் மீது நேரடி தாக்குதல் நடத்தியிருக்கிறார். தன்னுடைய கட்சியில் இருக்கும் பெண் நிர்வாகியை இப்படி சீமான் பேசியிருக்க மாட்டார் என்று அவரது தம்பிகள் நம்பிவந்த நேரத்தில், அப்படித்தான் பேசுவேன் என்று சீமான் ஒப்புக்கொண்டுள்ளது அத்தனை பேரையும் அதிரவைத்துள்ளது. ஒரு பெண் என்ற […]

விஜய்க்குப் போட்டியாக உதயநிதி..? அதிக மாணவர்களுக்குப் பரிசளிப்பு

தமிழக வெற்றிக் கழகம் தொடங்கியிருக்கும் நடிகர் விஜய் சமீபத்தில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்குப் பரிசுகள் வழங்கி சிறப்பித்தார். விஜய்யின் செயல் சமுகவலைதளங்களில் பாராட்டு பெற்றது. இந்த விஷயத்தில் நடிகர் விஜய் செய்த பாராட்டை முறியடிக்கும் வகையில் அதிக மாணவர்களுக்கு பாராட்டும் பரிசும் கொடுக்கும் வகையில் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை அமைச்சர் அன்பில் மகேஸ் மூலம் செய்துவருகிறார் அமைச்சர் உதயநிதி. பள்ளி மாணவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் அவர்களுடைய […]

இணையத்தில் வைரலாகும் எடப்பாடி பழனிசாமி ஃபேமிலி தி.மு.க. Vs ஃபேமிலி

சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்திருக்கும் மாஜி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை, கரூரில் இருக்கும் அவரது வீட்டுக்கே நேரில் சென்று சந்தித்துத்திரும்பினார் எடப்பாடி பழனிசாமி. அவருடன் கழகத்தின் முக்கியத் தலைவர்கள் பலரும் உடன் சென்றனர். எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் எடப்பாடி பழனிசாமியும் மற்ற தலைவர்களும் சேர்ந்து அந்நியோன்யமாகக் காட்சியளித்தார்கள். அதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘’திராவிட முன்னேற்ற கழக ஆட்சி வந்த பிறகு வேண்டுமென்றே திட்டமிட்டு அஇஅதிமுக நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மீது தொடர்ந்து பொய் வழக்கு போடுவது வாடிக்கையாகி […]

வன்னியர்களுக்கு சமூக அநீதி? ஆர்.டி.ஐ. அறிக்கையை ராமதாஸ் ஏத்துக்க மாட்டாராம்.

தேர்தல் நேரங்களிலும் கட்சிக்குள் மந்தநிலை ஏற்படும் சமயத்திலும் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு என்பதை பெரிய பிரச்னை போன்று கிளப்பி பரபரப்பை ராமதாஸும் அன்புமணியும் உருவாக்குவார்கள். இந்த நிலையில் , சென்னை கொண்டையன் கோட்டை மறவன் சங்கத்தைச் சேர்ந்த பொன்பாண்டியன் என்பவர் தகவல் அறியும் உரிமையின் கீழ் பெறப்பட்ட தகவல்கள் பாமக விடுக்கும் 10.5% கோரிக்கை வன்னியர்களுக்கு எதிரானது என்பதை காட்டுகிறது தமிழ்நாட்டில் 2018ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை MBBS படிப்பில் சேர்ந்த 24,330 […]

மதுரை எய்ம்ஸ், வானதி சீனிவாசனை போட்டுத் தாக்கும் சு.வெங்கடேசன்

கட்டுக்கதைகள் சொல்லி தமிழக மக்களை ஏமாற்ற வேண்டாம் என்று பா.ஜ.க. தலைவர் வானதி சீனிவாசன் மதுரை எம்.பி. வெங்கடேசன் மீது குற்றச்சாட்டு வைத்திருந்தார். இதற்கு பதிலடியாக மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டாவையும், தன்னை விமர்சனம் செய்த வானதி சீனிவாசனையும் போட்டுத் தாக்கியிருக்கிறார் மதுரை எம்.பி. வெங்கடேசன். இது குறித்து சு.வெங்கடேசன், ‘நான் உணர்ச்சி பொங்க பேசி கட்டுக்கதைகள் மூலம் தமிழக மக்களை ஏமாற்ற முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார் வானதி சீனிவாசன். ரயில்வே பட்ஜெட்டை பாஜக அரசு தான் ஒழித்தது. […]

வயநாட்டில் வைரலாகும் மேஜர் சீதா ஷெல்கே… இவர் என்ன செஞ்சாருன்னு தெரியுமா?

இயற்கை பெருந்துயரமாக நடந்திருக்கும் வயநாடு நிலச்சரிவு 340க்கும் மேற்பட்ட நபர்களின் உயிரைப் பறித்துள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கிறார்கள். ஏராளமான நபர்கள் ஒரே இரவில் அத்தனை சொத்துக்களையும் பறிகொடுத்து ரோட்டுக்கு வந்திருக்கிறார்கள். இந்த நிலையில் ராகுல் காந்தியின் வருகை பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை கொடுத்தது. நிலச்சரிவு தொடங்கிய இடம் வரையிலும் நேரில் சென்று பார்வையிட்ட ராகுல் காந்தி, முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்களையும், இறந்தவர் உடல்களையும் பார்த்து வேதனை தெரிவித்தார். அதோடு காங்கிரஸ் கட்சி சார்பில் 100 வீடுகள் கட்டிக் […]

ஒலிம்பிக்கில்  லக்‌ஷயா சென் வரலாற்று சாதனை… பதக்கம் கிடைக்குமா?

குட்டியூண்டு ஜப்பான், இத்தாலி, உஸ்பெஸ்கிஸ்தான் போன்ற நாடுகள் எல்லாம் ஒலிம்பிக்கில் தங்க வேட்டை நடத்திக்கொண்டு இருக்கும் நேரத்தில், நம் நாட்டு வீரர்கள் இன்னமும் தட்டுத் தடுமாறிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் நம்பிக்கையூட்டும் விதமாக பாரிஸ் ஒலிம்பிக்கில் பாட்மிண்டனில் இந்திய வீரர் லக்‌ஷயா சென் அரையிறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளார். இதன் மூலம் ஒலிம்பிக்கில் பாட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் அரையிறுதி ஆட்டத்துக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். காலிறுதி ஆட்டத்தில் சீன தைபேவின் […]

மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் எடப்பாடி பழனிசாமி. எதற்காக இந்த சந்திப்பு தெரியுமா?

மாஜி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருப்பதாக ஒரு செய்தி பரவியிருந்த நிலையில், அவரது வீட்டுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்று ஆறுதல் கூறிய விவகாரம் அரசியல் திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம் ஆர் விஜயபாஸ்கர் மீது சுமார் 100 கோடி ரூபாய் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து மூன்றாவது முறையாக […]