News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

மகாராஜா அரவிந்த் கெஜ்ரிவால்..? அதிர்ச்சியூட்டும் ஆடம்பரம்

ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரே போராட்டம் மூலம் மக்களுக்கு அறிமுகம் ஆனவர் அரவிந்த் கெஜ்ரிவால். நியாயம், நேர்மையான அரசியல்வாதியாக இருப்பார் என்று மக்கள் நம்பி ஆட்சியை ஒப்படைத்தார்கள். இவர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்து ஜெயிலுக்குப் போய்வந்தார். இதை பா.ஜ.க.வின் மோசடி என்றே மக்கள் நம்பினார்கள். இந்த நிலையில், அவர் எத்தனை ஆடம்பரமாக வாழ்க்கை நடத்தியிருக்கிறார் என்ற தகவல் வெளிவர, மக்கள் அதிர்ந்து நிற்கிரார்கள். ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வரானதும் டெல்லியின் […]

எல்.முருகன் எதிரி, சீமான் துரோகி. விடுதலைச் சிறுத்தைகள் கடும் எச்சரிக்கை.

அண்ணன் திருமாவளவன் முதல்வராக என் உயிரைக் கொடுத்தும் உழைக்கத் தயாராக இருக்கிறேன் என்று பேசிய நாம் தமிழர் சீமானுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பது நாம் தமிழர் கட்சியினரை அதிர வைத்துள்ளது. சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன், ‘திருமாவளவன் தமிழக முதல்வராக ஆசைப்படுவது எல்லாம் அபத்தமானது. அவர் அருந்ததிய மக்களுக்கு எதிரி’ என்ற ரீதியில் பேசியிருந்தார். இதற்குத்தான் சீமான், ‘என் உயிரைக் கொடுத்தாவது திருமாவளவனை முதல்வர் ஆக்குவேன்’ என்று ஆவேசம் […]

சீனியர்களை ஓரம் கட்டி முதல்வர் ஆனாரா இ.பி.எஸ்..? உதயநிதிக்கு அ.தி.மு.க. அர்ச்சனை

அரசியல் அனுபவம் இல்லாத உதயநிதியை துணை முதல்வராக்கியதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்திருந்தார். இதற்கு உதயநிதி, ‘எடப்பாடி பழனிசாமி சீனியர்களை ஓரம் கட்டியே முதல்வரானார்’ என்றதற்கு அ.தி.மு.க.வினர் கடுமையான பதிலடி கொடுத்துவருகிறார்கள். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, ‘’ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு செங்கோட்டையன், செம்மலை, திண்டுக்கல் சீனிவாசன், பண்ருட்டி ராமச்சந்திரன் போன்ற சீனியர்களில் ஒருவர் முதல்வராக வருவார்கள் என்று மக்கள் எதிர்பார்த்தனர். அதற்காக கூவத்தூரில் நடந்த கூத்துக்களை தமிழகமே வேடிக்கைப் பார்த்தது. இந்த சீனியர்களை […]

காமராஜரை அவமானப்படுத்தும் தி.மு.க. கனிமொழியாவது கண்டிப்பாரா..?

பெருந்தலைவர் காமராஜரை திட்டமிட்டு அவமானப்படுத்தும் வேலையை தி.மு.க.வினர் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். இதற்கு தென் தமிழகத்தில் நாடார் இன மக்கள் வாக்குகளால் வெற்றி அடைந்த கனிமொழியும் அமைதி காப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. காமராஜரை அவமானப்படுத்துவதே, கனிமொழியின் செல்வாக்கை குறைப்பதற்கு நடக்கும் மறைமுக சதி என்றும் பேச்சு எழுந்திருக்கிறது. சமீபத்தில் தி.மு.க. மாணவர் அணியைச் சேர்ந்த ராஜீவ்காந்தி, ‘’நீதிக் கட்சி கொண்டுவந்த பள்ளிகளை எல்லாம் ராஜாஜி மூடினார். அந்த பள்ளிகளைத் தான் காமராஜர் மீண்டும் திறந்தார். அவர் புதிதாக […]

உதயநிதியை கூப்பிடவா? நள்ளிரவில் போலீசாரை வெளுத்து வாங்கிய போதை ஆசாமி!

சென்னையில் நள்ளிரவில் ரோந்து பணியில் இருந்த போலீசாரை ஒரு ஜோடி தரக்குறைவான வார்த்தைகளால் பேசி சர்ச்சையை எழுப்பினர். அதற்கு கைது செய்வோம் என்று கூறிய போலீசாரை கடுமையான வார்த்தைகளால் பேசிய வீடியோ  இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.   சென்னை மெரினா லூப் சாலையில் நள்ளிரில் ரோந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக காரில் வந்த ஜோடி போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் தரக்குறைவாக பேசி பணியை செய்ய விடாமல் தடுத்துள்ளனர். அதைத்தொடர்ந்து காதில் கேட்க […]

நடிகை கவுதமிக்கு அ.தி.மு.க.வில் முக்கிய பொறுப்பு!

90ஸ் நடிகையான கவுதமி தற்போது அரசியல் களத்தில் தீவிரம் காட்டி வருகிறார். பா.ஜ.க.வில் மாநில பொறுப்பில் இருந்த கவுதமி கடந்த பிப்ரவரி மாதம் அக்கட்சியில் இருந்து விலகி, அ.தி.மு.க.வில் இணைந்தார். இதை தொடர்ந்து நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பல்வேறு பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.   இதற்கிடையில் நிலமோசடி தொடர்பாக தனக்கு சரியான நீதி கிடைக்க வேண்டும் என்று நீதிமன்றத்திற்கு நடையாய் நடந்து கொண்டிருக்கிறார்.    இந்நிலையில் கட்சியில் அவருக்கு அங்கீகாரம் அளிக்கும் […]

சவுக்கு சங்கர் மீண்டும் ஜெயிலுக்குப் போகிறாரா..? அவரே கொடுக்கும் அப்டேட்

சிறையிலிருந்து வெளியே வந்திருக்கும் சவுக்கு சங்கர் தி.மு.க. அரசுக்கு பெரும் குடைச்சலக் கொடுப்பார், நிறைய ஊழல் ஆதாரங்கள் வெளியிட்டு பரபரப்புக் கிளப்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தன்னை மீண்டும் வழக்கில் சிக்கவைத்து சிறைக்குப் போகிறார்கள் என்று அவரே பதிவு போட்டிருக்கிறார். சவுக்கு சங்கரிடம் கைப்பற்றப்பட்ட செல்போன் மூலம் ஏராளமான தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன என்றும் 400க்கும் மேற்பட்ட பெண்களுடன் சவுக்கு சங்கருக்குத் தொடர்பு இருக்கிறது என்று திருச்சி சிவா ஒரு பேட்டியில் கூறினார். இந்த விஷயத்தில் தேவையில்லாமல் சவுக்கு […]

சகாயத்தை முதல்வர் ஆக்குவாரா விஜய்.? ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்..?

விஜய் மாநாட்டு மேடையில் யாரெல்லாம் இருக்கப்போகிறார்கள் என்று பலரும் கணித்துவருகிறார்கள். அந்த பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார் சகாயம் ஐ.ஏ.எஸ். தொடர்ந்து விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்திவரும் சகாயத்தை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகின்றன. இது குறித்து தமிழக வெற்றிக் கழக நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். ‘’விஜய் அரசியலை புதுமையாக செய்ய நினைக்கிறார் என்பதற்கு அவர் மாநாடு குறித்து வெளியாகியிருக்கும் அறிக்கையே சாட்சி. எப்படியாவது குடும்பத்தோடு மாநாட்டுக்கு வாங்க என்று அத்தனை கட்சிகளும் அழைக்கும் […]

கவர்னர் ஆர்.என்.ரவிக்குப் பதிலாக வி.கே.சிங்..? தி.மு.க.வுக்குப் பணியுமா பா.ஜ.க..?

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் ஏற்கெனவே முடிவடைந்துவிட்டது. ஆகவே, அவருக்கு ஓய்வு அளிக்கும் எண்ணத்தில் பா.ஜ.க. இருந்துவருகிறது. இந்நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் ஒட்டுமொத்த கட்சிகளின் கோபத்துக்கு ஆர்.என்.ரவி ஆளாகிவிட்டார். ஆகவே, அவருக்குப் பதிலாக வி.கே.சிங் நியமனம் செய்யப்படுவதாக செய்திகள் வருகின்றன. இது குறித்து பா.ஜ.க.வினரிடம் கேட்டபோது, ‘’ஐந்து ஆண்டுகள் பதவிக்காலத்தை முடிந்த தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விரைவில் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்படுவதற்கு வாய்ப்பு உண்டு. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, நாகாலாந்து ஆளுநராக முதலில் […]

மோடியிடம் 100 கோடி ரூபாய்க்கு விலை போனாரா திருமாவளவன்..? மகாராஷ்டிராவில் பா.ஜ.க.வுக்கு ஆதரவு

எந்த குழப்பமும் இல்லாத தெளிவான அரசியல்வாதியாக இருந்த திருமாவளவன் இப்போது ஒரே தேர்தலில் மோடிக்கும் ராகுல் காந்திக்கும் ஆதரவு தெரிவிக்கும் தில்லுமுல்லு அரசியல் செய்யத் தொடங்கியிருக்கிறார். 100 கோடி ரூபாய் பேரத்திற்கு திருமாவளவன் விலை போய்விட்டார் என்று அவர்கள் கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது. மகாராஷ்டிராவில் கடந்த தேர்தலில் உச்சகட்ட ஜனநாயகப் படுகொலை நடந்தது. மீண்டும் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் யாரும் எதிர்பாராத திருப்பமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி பத்து தொகுதிகளிலும் ராஷ்ட்ரிய ஜனதா […]