News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

லட்டு விவகாரம்: இன்று மாலை 6 மணிக்கு வீடுகளில் விளக்கு ஏற்றுங்கள்!

திருப்பதி பிரசாதமான லட்டில் விலங்குக் கொழுப்பு கலக்கப்பட்டதாக எழுந்த விவகாரம் தொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் பக்தர்கள் அனைவரும் மாலை 6 மணிக்கு தங்கள் வீடுகளில் விளக்கேற்றும்படி தெரிவித்துள்ளனர்.   காசுக்கடவுளான திருப்பதியில் கடந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் பிரசாதமாக வழங்கப்பட்ட லட்டில் விலங்கு கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்டதாக தகவல் வெளியானது. தற்போதைய ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு வெளியிட்ட பல்வேறு தகவல்களால் பக்தர்கள் அதிர்ந்து போயுள்ளனர்.   […]

சிறுமியை பாலியல் வன்கொடுமையில் இருந்து காப்பாற்றிய குரங்குகள்! எங்கே தெரியுமா?

பெண் குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை தடுத்த நிறுத்த எல்லா  இடங்களுக்கும் சினிமா கதாநாயகர்கள் வந்துவிட முடியுமா? தற்காப்புக் கலையும், தனி மனித ஒழுக்கமும், பெற்றோர்களின் சரியான வளர்ப்புமே இதுபோன்ற குற்றச்சம்பவங்களை நடக்காமல் தடுக்க முடியும்.   உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் பகுதியில் தவுலா என்ற கிராமம் அமைந்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய வீட்டிற்கு வெளியே விளையாடிக் […]

ரவுடி சீசிங் ராஜா என்கவுண்டர்! நடந்தது என்ன?

ஆந்திராவில் கைது செய்யப்பட்ட பிரபல ரவுடி சீசிங் ராஜா, சென்னை அழைத்து வரப்பட்ட நிலையில் என்கவுண்டர் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   கடந்த ஜூலை மாதம் 5ம் தேதி சென்னை பெரம்பூரில் உள்ள வீட்டருகே பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்து வந்த ஆம்ஸ்ட்ராங் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் இதுவரை 27 பேரை கைது செய்துள்ளனர்.   அவர்களில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருவேங்கடம், போலீசார் பிடியில் இருந்து தப்பிச்சென்ற […]

அவாளுக்குத் துடிப்பீங்க… பட்டியிலின மக்களுக்கு நடிப்பீங்களா..? எல்.முருகனுக்கு கடும் எதிர்ப்பு

ஜாதி மோதல்கள், கோயில் நுழைவுக்கு அனுமதி மறுப்பு, ஆணவக்கொலை, பாலியல் கொடூரம் என பட்டியலின மக்களுக்கு எதிராக எத்தனையோ அவலங்கள் நேர்ந்த நேரத்தில் எல்லாம் நேரில் வந்து ஆதரவு கொடுக்காத மத்திய அமைச்சர் எல்.முருகன் திருநெல்வேலியில் நடந்த பூணூல் அறுப்பு சம்பவத்திற்கு நேரில் ஆஜராகி கண்டனம் செய்திருப்பதற்கு கடும் எதிர்ப்பு தோன்றியிருக்கிறது. திருநெல்வேலி மாவட்டம் டிவிஎஸ் நகரை சார்ந்த சிறுவனை அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியதோடு, அவன் அணிந்திருந்த பூணூலை அறுத்தெறிந்து, ‘இனி பூணூல் அணியக்கூடாது’ என்று […]

உதயமாகிறதா கலைஞர் தி.மு.க..? உதயநிதிக்கு எடப்பாடி அணி போர்க்கொடி

’’எடப்பாடி பழனிசாமி அவருடைய கட்சியை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும், பழைய அ.தி.மு.க.வாக வரவேண்டும் என்பது தான் எங்களுடைய ஆசை’’ என்று உதயநிதி பேசிய விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கடும் ஆவேசம் அடைந்திருக்கிறார்கள். இதற்கு பதிலடியாக, தி.மு.க. உடையப் போகிறது என்று ஒரு தகவலை வெளிப்படையாகப் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். இது குறித்து அ.தி.மு.க.வின் மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம், ‘’உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுப்பதை தி.மு.க.வின் சீனியர்கள் யாருமே விரும்பவில்லை. தி.மு.க. மூத்த நிர்வாகியை துணை முதல்வராக்க […]

அநுர குமார திசநாயக்க பதவிக்கு வந்தாச்சு. அச்சத்தில் இலங்கை தமிழர்கள், தமிழக மீனவர்கள்

இலங்கையின் முதல் இடதுசாரி ஜனாதிபதியாக அநுர குமார திசநாயக்க இன்று பொறுப்பேற்றுள்ளார். பதவி ஏற்கையில் அவர், “நான் மந்திரவாதி அல்ல… இலங்கையின் சாதாரண குடிமகன். என்னிடம் திறமைகள் மற்றும் இயலாமைகள் உள்ளன. எனக்கு தெரிந்த மற்றும் தெரியாத விஷயங்கள் உள்ளன. ஜனாதிபதியாக இந்தப் பயணத்தில் எனது திறன்களை மேலும் மேம்படுத்தி, அதிக அறிவைப் பெற விரும்புகிறேன்…’ என்று பேசியிருக்கிறார். இடதுசாரி என்றாலும் இந்தியாவுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் எதிரான உறுதியான நிலைப்பாடு கொண்டவர் என்பதால் இலங்கைத் தமிழர்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். […]

திருமாவளவன் கட்சியை உடைக்கிறாரா ஆதவ் அர்ஜுன்..? விசிகவில் உட்கட்சி மோதல்

தி.மு.க. கூட்டணியில் அசைக்க முடியாத கட்சியாக இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மீண்டும் சர்ச்சையில் மாட்டியிருக்கிறது. ’’நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சினிமா துறையிலிருந்து அரசியலுக்கு வந்தவர்களே துணை முதல்வராகும் போது, 40 ஆண்டுக்கால அரசியல் அனுபவம்கொண்ட எங்கள் தலைவரை துணை முதல்வராக்க நாங்கள் விரும்புவதில் தவறில்லையே!” என்று வி.சி.க.வின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியிருப்பது தி.மு.க.வை கண் சிவக்க வைத்திருக்கிறது. அதேநேரம், வி.சி.க.வை இரண்டாக உடைப்பதற்காகவே இந்த வேலையை ஆதவ் செய்கிறார் என்று சிறுத்தைகள் கட்சியினரே […]

இலங்கை அதிபர் தேர்தலில் எதிர்பாராத திருப்பம். மோடி ஆதரவாளர் ராஜபக்‌ஷே அவுட்

இலங்கை தேர்தலில் தற்போதைய நிலவரப்படி தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் அநுர குமார திசநாயக்க அதிக வாக்குகளை பெற்று முன்னிலை வகிக்கிறார். மோடி அரசின் வெளியுறவுக் கொள்கையின் தோல்வியாகவே பார்க்கப்படுகிறது. இந்திய அரசு தனது இலங்கைக் கொள்கையை அதானியின் வணிக நலனை மட்டும் முன்னிறுத்தி அரசியல் செய்யக்கூடாது என்று எதிர்க்குரல் எழுப்பிவருகிறார்கள். ஏனென்றால் மோடியின் ஆதரவு பெற்ற ராஜபக்‌ஷே மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார். மக்கள் நலனையும் மக்களின் எதிர்காலத்தையும் புரிந்துகொள்ளாமல் அரசாட்சி செய்பவர்களுக்கு இந்த கதியே […]

எடப்பாடி பழனிசாமிக்கு ஏன் இத்தனை கோபம்..? தூண்டிவிட்டது இவர் தானா..?

எடப்பாடி பழனிசாமியுடன் ஒருங்கிணைப்புக் குழு பேச்சுவார்த்தை நடத்துகிறது, எந்த நேரமும் இணைப்பு நடக்கலாம் என்று சமீபத்தில் சில பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின. அதேபோல், அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக 6 பேர் மட்டுமே இருந்த நிலையில் இப்போது 12 பேர் எதிர்ப்பு என்றும் செய்திகள் வெளியாகின. இப்படி வெளியான செய்திகள் எல்லாவற்றுக்கும் முகப்பேரில் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழா கூட்டத்தில் எடப்பாடி காட்டமான பதிலடி கொடுத்திருக்கிறார். இத்தனை கோபமாக எடப்பாடி பழனிசாமி பேசியதற்குக் காரணம் யார் […]

கொடைக்கானலில் 200 அடி நீளத்திற்கு நிலத்தில் ஏற்பட்ட திடீர் விரிசல்!

சுற்றுலாதலமான கொடைக்கானல் மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படுகிறது. பரிட்சை விடுமுறை மட்டுமல்லாமல் வார இறுதி நாட்களிலும் ஆயிரக்கணக்கான சுற்றுலாவாசிகள் கொடைக்கானலுக்கு படையெடுப்பது வழக்கம். மலைப்பாங்கான இடங்களில் நிலச்சரிவு உள்ளிட்ட சில பிரச்சினைகள் வரத்தான் செய்கிறது.   அந்த வகையில் கொடைக்கானல் அருகே உள்ள தொலுக்கம்பட்டி பகுதியில் 200 அடி நீளத்திற்கு நிலத்தில் திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.   […]