News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

வசூல் வேட்டையா… கூட்டணி மாற்றமா..? திருமாவளவன் கட்சியில் பிரமாண்ட மாற்றம்

தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளிலும் மாவட்டச் செயலாளர்கள், மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் இருக்கிறது. குறிப்பிட்ட மாவட்டத்தில் இவர்கள் தான் சகல அதிகாரத்துடன் திகழ்வார்கள். தங்களுக்குக் கீழ் இருக்கும் சகல நிர்வாகிகளுக்கும் பொறுப்பு வாங்கிக்கொடுத்து, அதில் வசூல் செய்து, அவர்களுக்கும் கட்சிக்கும் செலவழிப்பார்கள். முக்கியக் கட்சிகளில் எல்லாம் ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திற்கும் ஒன்று அல்லது இரண்டு மாவட்டச் செயலாளர்கள் நியமனம் செய்யப்படுவது வழக்கம். ஆனால், திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இப்போது ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் ஒரு மாவட்டச் செயலாளர் […]

பன்னீருக்கு துரோகம் செய்ததால் வைத்திலிங்கத்துக்கு ரெய்டு..? களம் இறங்கிய அமலாக்கத்துறை

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் இருக்கும் ஒரே பிரபலமான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் சமீபத்தில் எடப்பாடி பழனிசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக செய்தி வெளியானது. இதனால் கடுப்பான ஓபிஎஸ் பா.ஜ.க. மூலம் வைத்திலிங்கத்துக்கு எச்சரிக்கை கொடுக்கும் வகையில் ரெய்டு நடப்பதாக பரபரப்பு எழுந்துள்ளது. முன்னாள் அமைச்சரான வைத்திலிங்கம் இப்போது ஒரத்தநாடு தொகுதி எம்எல்ஏவாக இருக்கிறார். ஓபிஎஸ் தலைமையில் நடத்தப்பட்டு வரும் அதிமுக தொண்டர்கள் மீட்பு குழுவில் இடம்பிடித்துள்ளார். இவர் 2011-16 கால அதிமுக ஆட்சியில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற […]

ஆண்டுதோறும் 3 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்! முதல்வர் அறிவிப்பு!

தீபாவளி பண்டிகை முதல் இல்லத்தரசிகளுக்கு ஆண்டுதோறும் 3 இலவச சமையல் எரிவாயு வழங்கப்படும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளது பெண்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்திள்ளது.   ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு தீபம் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.   இந்நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு, தீபாவளி முதல் ஆண்டுதோறும் 3 இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். பெண்கள் நலனை ஆதரிப்பது மற்றும் வீட்டுச்செலவுகளை குறைப்பதை நோக்கமாகக் கொண்ட […]

த.வெ.க.மாநாட்டுக்கு வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு வருகிற 27ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) விழுப்புரம், விக்கிரவாண்டி வி சாலையில் மிகவும் கோலாகலமாக நடைபெற உள்ளது. இம்மாநாட்டிற்கு கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் வரக்கூடாது என்று அக்கட்சியின் தலைவர் விஜய் அன்புக்கோரிக்கை வைத்துள்ளார்.   தீபாவளி பண்டிகைக்கு 3 நாட்கள் முன்னதாக மாநாடு நடைபெற உள்ளது என்பதாலும், இது மழைக்காலம் என்பதாலும் தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் மேற்கொள்ள விஜய் உத்தரவிட்டுள்ளார். அதன்படி பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் உத்தரவுப்படி கட்சியின் மாவட்ட செயலாளர்கள் […]

இர்பானை மன்னிக்க முடியாது! அமைச்சர் மா.சுப்பிரமணியன் திட்டவட்டம்!

சர்ச்சையில் சிக்கியுள்ள பிரபல இர்பானை மன்னிக்கவே முடியாது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.   சென்னை சோழிங்கநல்லூரில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் மருத்துவமனையில் பிரபல யூடியூபர் தன்னோட மனைவி ஆலியாவை கடந்த ஜூலை  மாதம் பிரசவத்திற்காக அனுமதித்தார். அதன்படி ஜூலை 24ம் தேதி இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. பிரசவ அறைக்குள் மனைவியுடன் இருந்த இர்பான் அங்கு நடக்கும் சிகிச்சையை தன்னுடன் அழைத்து சென்ற வீடியோகிராபரை வைத்து வீடியோவாக பதிவு செய்தார். […]

மகாராஜா அரவிந்த் கெஜ்ரிவால்..? அதிர்ச்சியூட்டும் ஆடம்பரம்

ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரே போராட்டம் மூலம் மக்களுக்கு அறிமுகம் ஆனவர் அரவிந்த் கெஜ்ரிவால். நியாயம், நேர்மையான அரசியல்வாதியாக இருப்பார் என்று மக்கள் நம்பி ஆட்சியை ஒப்படைத்தார்கள். இவர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்து ஜெயிலுக்குப் போய்வந்தார். இதை பா.ஜ.க.வின் மோசடி என்றே மக்கள் நம்பினார்கள். இந்த நிலையில், அவர் எத்தனை ஆடம்பரமாக வாழ்க்கை நடத்தியிருக்கிறார் என்ற தகவல் வெளிவர, மக்கள் அதிர்ந்து நிற்கிரார்கள். ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வரானதும் டெல்லியின் […]

எல்.முருகன் எதிரி, சீமான் துரோகி. விடுதலைச் சிறுத்தைகள் கடும் எச்சரிக்கை.

அண்ணன் திருமாவளவன் முதல்வராக என் உயிரைக் கொடுத்தும் உழைக்கத் தயாராக இருக்கிறேன் என்று பேசிய நாம் தமிழர் சீமானுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பது நாம் தமிழர் கட்சியினரை அதிர வைத்துள்ளது. சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன், ‘திருமாவளவன் தமிழக முதல்வராக ஆசைப்படுவது எல்லாம் அபத்தமானது. அவர் அருந்ததிய மக்களுக்கு எதிரி’ என்ற ரீதியில் பேசியிருந்தார். இதற்குத்தான் சீமான், ‘என் உயிரைக் கொடுத்தாவது திருமாவளவனை முதல்வர் ஆக்குவேன்’ என்று ஆவேசம் […]

சீனியர்களை ஓரம் கட்டி முதல்வர் ஆனாரா இ.பி.எஸ்..? உதயநிதிக்கு அ.தி.மு.க. அர்ச்சனை

அரசியல் அனுபவம் இல்லாத உதயநிதியை துணை முதல்வராக்கியதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்திருந்தார். இதற்கு உதயநிதி, ‘எடப்பாடி பழனிசாமி சீனியர்களை ஓரம் கட்டியே முதல்வரானார்’ என்றதற்கு அ.தி.மு.க.வினர் கடுமையான பதிலடி கொடுத்துவருகிறார்கள். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, ‘’ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு செங்கோட்டையன், செம்மலை, திண்டுக்கல் சீனிவாசன், பண்ருட்டி ராமச்சந்திரன் போன்ற சீனியர்களில் ஒருவர் முதல்வராக வருவார்கள் என்று மக்கள் எதிர்பார்த்தனர். அதற்காக கூவத்தூரில் நடந்த கூத்துக்களை தமிழகமே வேடிக்கைப் பார்த்தது. இந்த சீனியர்களை […]

காமராஜரை அவமானப்படுத்தும் தி.மு.க. கனிமொழியாவது கண்டிப்பாரா..?

பெருந்தலைவர் காமராஜரை திட்டமிட்டு அவமானப்படுத்தும் வேலையை தி.மு.க.வினர் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். இதற்கு தென் தமிழகத்தில் நாடார் இன மக்கள் வாக்குகளால் வெற்றி அடைந்த கனிமொழியும் அமைதி காப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. காமராஜரை அவமானப்படுத்துவதே, கனிமொழியின் செல்வாக்கை குறைப்பதற்கு நடக்கும் மறைமுக சதி என்றும் பேச்சு எழுந்திருக்கிறது. சமீபத்தில் தி.மு.க. மாணவர் அணியைச் சேர்ந்த ராஜீவ்காந்தி, ‘’நீதிக் கட்சி கொண்டுவந்த பள்ளிகளை எல்லாம் ராஜாஜி மூடினார். அந்த பள்ளிகளைத் தான் காமராஜர் மீண்டும் திறந்தார். அவர் புதிதாக […]

உதயநிதியை கூப்பிடவா? நள்ளிரவில் போலீசாரை வெளுத்து வாங்கிய போதை ஆசாமி!

சென்னையில் நள்ளிரவில் ரோந்து பணியில் இருந்த போலீசாரை ஒரு ஜோடி தரக்குறைவான வார்த்தைகளால் பேசி சர்ச்சையை எழுப்பினர். அதற்கு கைது செய்வோம் என்று கூறிய போலீசாரை கடுமையான வார்த்தைகளால் பேசிய வீடியோ  இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.   சென்னை மெரினா லூப் சாலையில் நள்ளிரில் ரோந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக காரில் வந்த ஜோடி போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் தரக்குறைவாக பேசி பணியை செய்ய விடாமல் தடுத்துள்ளனர். அதைத்தொடர்ந்து காதில் கேட்க […]