News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

அமித் ஷா வேட்டை ஆரம்பம்…. ஓபிஎஸ் வெயிட்டிங்… இபிஎஸ் எஸ்கேப்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் 4ம் தேதி புதுக்கோட்டைக்கு வருவதை ஓ.பன்னீர்செல்வம் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கிறார். அதேநேரம், இபிஎஸ் கூட்டணி பேச்சுவார்த்தையை பொங்கலுக்குப் பிறகே தொடர நினைக்கிறார். எனவே, அமித் ஷா பயணம் பயன் தருவது உறுதியில்லை என்றே தெரிகிறது. பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நடத்தி வரும், “தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்” என்ற யாத்திரைக்கு புதுக்கோட்டையில் நடைபெறும் நிறைவு விழாவில் அமித் ஷா கலந்துகொண்டு உரையாற்றுகிறார். இந்த பொதுக்கூட்டத்தில் சுமார் […]

கூட்டணிக்கு மாணிக்கம் தாகூர் வேட்டு. திமுக ரெட் நோட்டீஸ்..?

பாஜக ஆளும் உத்தரப் பிரதேசம் சிறப்பாக உள்ளது. திமுக ஆளும் தமிழ்நாடு மோசமாக உள்ளது என்று சொன்ன காங்கிரஸ் பிரவீன் சக்கரவத்திக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியைக் கண்டித்த மாணிக்கம் தாகூரை திமுக ரெட் மார்க் செய்துள்ளது. விஜய் கூட்டணிக்காக திமுக கூட்டணியை உடைக்கப் பார்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளன. பிரவீன் சக்கரவர்த்திக்கு ஆதரவாக மாணிக்கம் தாகூர், ‘’காங்கிரஸ் தனது உள்கட்சி விஷயங்களை எப்படி நடத்த வேண்டும் என்று கூட்டணி கட்சிகள் உத்தரவிடத் தொடங்கியது எப்போது? […]

பொங்கலுக்கு ஸ்டாலின் அல்வா…? எக்கச்சக்க எதிர்பார்ப்பில் தமிழக மக்கள்

இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வருவதால் தைப் பொங்கலுக்கு கண்டிப்பாக ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளது. இதற்கிடையில், பொங்கல் பரிசை 5 ஆயிரமாகத் தர வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். தமிழகம் முழுக்க போஸ்டர் ஒட்டி கேட்கத் தொடங்கியும் இருக்கிறார்கள். இந்நிலையில் ரொக்கப்பரிசு பற்றிய தகவல் இல்லாமல் பொங்கல் தொகுப்பு மட்டும் வெளியாகியுள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பாக அரிசி, சர்க்கரை, முழு […]

தைப் பொங்கலுக்கு 5 ஆயிரம் ரூபாய்..? அதிமுக போஸ்டர் அதிரடி

அதிமுக ஆட்சியில் இருந்தபோது டாஸ்மாக் மூட வேண்டும் என்று ஸ்டாலின் போராட்டம் நடத்தினார். அதேபோன்று எதிர்க்கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது, ‘தைப் பொங்கலுக்கு அரசு 5 ஆயிரம் ரூபாய் தரவேண்டும்’ என்று போர்க்கொடி எழுப்பினார். இப்போது ஆட்சியில் இருக்கும் நிலையில்,  திமுக அரசு பொங்கல் பரிசு பணம் கொடுப்பது குறித்து இன்னமும் வாய் திறக்கவே இல்லை. கப்சிப் என்று அமைதியாக இருக்கிறது. ஸ்டாலின் வைத்த வேண்டுகோளை இப்போது அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அவரது […]

ஒரே நாளில் வெட்டுப்பட்டவர் டிஸ்சார்ஜ்… இது திராவிட மாடலா ஸ்டாலின்..?

திருத்தணி ரயில்வே ஸ்டேஷனில் காட்டுத்தனமாக வெட்டுப்பட்ட வடமாநில இளைஞர் சிராஜ் ஒரே நாள்ல டிஸ்சார்ஜ் ஆகி சொந்த ஊருக்கு அனுப்பப்பட்ட விவகாரம் தமிழகம் முழுக்க அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக அரசின் சிகிச்சை மீது நம்பிக்கை இல்லாமல் போய்விட்டாரா அல்லது போலீஸ் தரப்பில் அழுத்தம் கொடுத்து அனுப்பப்பட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து அதிமுகவினர், ‘’திருத்தணியில் 17 வயது கஞ்சா போதைச் சிறார்களால் கொடூரமாக தாக்கப்பட்ட வடமாநில இளைஞர் சூரஜ், சிகிச்சை முடிந்து சொந்த ஊருக்கு சென்றுவிட்டதாக திமுக […]

ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு புத்தாண்டு பரிசு. டேவிட்சன் தேவாசீர்வாதம் டிஜிபியாக நியமனம்…!

தமிழ்நாட்டில் முக்கிய பதவிகளில் இருக்கும் சில ஐபிஎஸ் அதிகாரிகள் ஓய்வு பெறவுள்ள நிலையில் தமிழக அரசுப் பணியிட மாற்றம் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதில் டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆயுதப்படை டிஜிபியாக, சந்தீப் மிட்டல் சைபர் கிரைம் டிஜிபியாக, பால நாகதேவி பொருளாதாரக் குற்றப்பிரிவு டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இது, இந்த பணியிட மாற்றங்கள் நாளை முதல் அமலுக்கு வரவுள்ள நிலையில், இவர்களுக்குப் புத்தாண்டு பரிசு கிடைத்திருக்கிறது.
அதன்படி ஏடிஜிபியாக இருந்து வந்த டேவிட்சன் தேவாசீர்வாதத்திற்கு தற்போது டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அவர் ஆயுதப்படை டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல ஏடிஜிபி சந்தீப் மிட்டலும் டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டு சைபர் கிரைம் டிஜிபி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
அந்த வரிசையில், ஏடிஜிபி பால நாகதேவியும் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவர் பொருளாதாரக் குற்றப்பிரிவு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல சிபிசிஐடி ஐஜி அன்பு பதவி உயர்வு பெற்று சிபிசிஐடி ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். தென்மண்டல ஐஜியான பிரேம் ஆனந்த் சின்கா, ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்று ஆவடி காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மகேஷ்வர் தயாள், சிறைத் துறையிலிருந்து மாற்றப்பட்டு சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆவடி காவல் ஆணையராக உள்ள சங்கர், சிறைத் துறை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஏடிஜிபியான அமல்ராஜ், தாம்பரம் காவல் ஆணையராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியான அனிஷா உசேன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாநகர காவல் ஆணையராக இருந்து வரும் சரவண சுந்தர், மேற்கு மண்டல ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல விழுப்புரம் மாவட்ட எஸ்பியாக உள்ள பி.சரவணன், திருநெல்வேலி சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோன்று தலைமையிட ஏ.டி.ஜி.பி-யாக டி.செந்தில்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். காவல்துறை நலப்பிரிவு ஏ.டி.ஜி.பி-யாக, மகேந்தர் குமார் ரத்தோட், செயலாக்க பிரிவு ஏ.டி.ஜி.பி-யாக, நஜ்முல் ஹூடா நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அமலாக்கப் பணியகம் சிஐடி பிரிவின் ஏ.டி.ஜி.பி-யாக, அபின் தினேஷ் மொடக், சிறைத்துறை இயக்குநராக சங்கர், தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் ஏ.டி.ஜி.பி-யாக தினகரன் நியமனம், மாநில குற்ற ஆவண காப்பக பிரிவின் ஐ.ஜி-யாக, சோனல் சந்திரா, நிர்வாகப்பிரிவு ஐ.ஜி-யாக மகேஸ்வரி நியமனம், விரிவாக்கப்பிரிவு ஐ.ஜி-யாக தேன்மொழி IPS நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மண்டல ஐ.ஜி மாற்றங்கள் வரிசையில் மத்திய மண்டல ஐ.ஜி-யாக, பாலகிருஷ்ணன், தென்மண்டல ஐ.ஜி-யாக, விஜயேந்திர பிதாரி, மேற்கு மண்டல ஐ.ஜி-யாக, சரவணசுந்தர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாநகர காவல் ஆணையர் வரிசையில் தாம்பரம் மாநகர ஆணையரகத்துக்கு அமல்ராஜ், கோவை மாநகர ஆணையரகத்துக்கு கண்ணன்,திருநெல்வேலி மாநகர ஆணையரகத்துக்கு மணிவண்ணன் ஆகியோர் நியமனம் ஆகியுள்ளனர்.
சென்னை பெருநகர காவல்துறையில் தலைமையிட கூடுதல் ஆணையராக, ஜோஷி நிர்மல் குமார், தென் மண்டலம்(சட்டம்-ஒழுங்கு) கூடுதல் ஆணையராக நரேந்தரின் நாயர், சென்னை வடக்கு (சட்டம்-ஒழுங்கு) இணை ஆணையராக திஷா மிட்டல், சென்னை மேற்கு (சட்டம் – ஒழுங்கு) இணை ஆணையராக உமா மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தலைமையிட இணை ஆணையராக மகேஷ்வரன், அடையாறு துணை ஆணையராக, ஏ.சி.கார்த்திகேயன், கீழ்ப்பாக்கம் துணை ஆணையராக கீதா நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சரக டி.ஐ.ஜிக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ள வகையில் காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி-யாக சசாங் சாய், ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி-யாக தேஷ்முக் சேகர் சஞ்சய், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி-யாக அற.அருளரசு, திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி-யாக பி.சரவணன், திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி-யாக சாமிநாதன், சேலம் சரக டி.ஐ.ஜி-யாக சந்தோஷ் ஹதிமானி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மாவட்ட எஸ்.பி மாற்றங்கள் வரிசையில் விழுப்புரம் எஸ்.பி-யாக, சாய் பிரனீத், திருநெல்வேலி எஸ்.பி-யாக, பிரசன்ன குமார், செங்கல்பட்டு எஸ்.பி-யாக, சிபின், நாகப்பட்டினம் எஸ்.பி-யாக, பல்லா கிருஷ்ணனன், பெரம்பலூர் எஸ்.பி-யாக, அனிதா, கள்ளக்குறிச்சி எஸ்.பி-யாக, எஸ்.அரவிந்த், தென்காசி எஸ்.பி-யாக, ஜி.எஸ்.மாதவன், தூத்துக்குடி எஸ்.பி-யாக, சிலம்பரசன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பெருகும் ரீல்ஸ் ரவுடிகள்… போதை அரசு என்ன செய்யவேண்டும்..?

கையில் அரிவாள், கத்தியைத் தூக்குவதற்கே சிறுவர்கள் அச்சப்பட்ட காலம் போயே விட்டது. பிறந்த நாள் கேக் வெட்டுவதற்கே பட்டாக்கத்தியைக் கையில் எடுக்கிறார்கள். இப்போது 18 வயதை கூட ஆகாத டிபன் பாக்ஸ் ஹேர் கட்டிங் புள்ளீங்கோ எல்லாம் பைக்கில் ட்ரிபிள்ஸ் செல்கின்றன. ஹெல்மெட் போடுவதில்லை. பொதுமக்களை அச்சுறுத்தும்படி அதீத ஹாரன் ஒலி எழுப்பி வேகமாக வண்டி ஓட்டுகின்றன. இந்த மைனர் குஞ்சுகள்தான் கும்பலாக சேர்ந்து ரயில் போன்ற பொதுப்போக்குவரத்து வாகனங்களில் அரிவாள்களை தூக்கி வெட்டும் அளவுக்கு வளர்ந்து […]

சம ஊதியம் வாக்குறுதியை மறக்கலாமா ஸ்டாலின்..? மூன்றாவது நாளாக ஆசிரியர் போராட்டம்

ஊதிய முரண்பாடுகளைக் களைந்து சம ஊதியம் வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் நடத்திவரும் போராட்டம் நான்காவது நாளாக இன்றும் நீடித்தது.  இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் அடக்குமுறையில் கைது செய்ததை அடுத்து பெரும் பரபரப்பு நிலவியது. ஏன் இந்த போராட்டம் சமவேலைக்கு சம ஊதியம் கோரி சென்னையில் மூன்றாவது நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் இடைநிலை ஆசிரியர்கள். அதாவது 2009 மே 31-க்கு முன்பு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் 11,700 ரூபாய் ஊதியம் பெற்று வந்தனர். […]

சோழிங்கநல்லூர் தொகுதியில் தமிழிசை சவுந்தரராஜன்..? இபிஎஸ் சூசக அறிவிப்பு

நேற்றைய தினம் சோழிங்கநல்லூரில் நடைபெற்ற எடப்பாடி பழனிசாமியின் எழுச்சிப் பயணத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கலந்துகொண்டார். அதோடு அவர் இபிஎஸ்க்கு தங்க முலாம் பூசப்பட செங்கோல் வழங்கினார். இதையடுத்து இந்த தொகுதியில் தமிழிசை நிற்பதற்கு வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படுகிறது. ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப்பயணம் மேற்கொள்ளும் இபிஎஸ் கடந்த 5 கட்டங்களில் 175 தொகுதிகளுக்குச் சென்று மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார். ஆறாவது கட்டமாக நேற்று திருப்போரூர் மற்றும் சோழிங்கநல்லூர் தொகுதிகளில் எழுச்சியுரை […]

காங்கிரஸ் கட்சியை உடைக்குமா திமுக..? கூட்டணி ஆட்சி கோஷம்

ஆட்சி அதிகாரத்தில் பங்கு அவசியம் என்ற கிரிஷ் சோடங்கரின் கருத்து தமிழ்நாடு காங்கிரஸின் கருத்து தான் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ள விவகாரம் திமுகவினரை கோபமூட்டியுள்ளது. கடந்த 2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 25 இடங்களில் போட்டியிட்டு 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தோற்றூப்போன 7 தொகுதிகளிலும் காங்கிரசை அதிமுக வெற்றி வென்றது. ஆகவே, இந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு 20 சீட் கொடுத்தால் போதும் என்று திமுக […]