உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் தாக்குதல் !

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள போர், இரண்டரை ஆண்டுகளை கடந்தும் தொடர்கிறது. இதில் இரு தரப்பும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன . இதை தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையிலான மோதல் தொடர்கிறது. இந்த சூழலில், உக்ரைன் மீது நேற்று திடீர் வான்வழித் தாக்குதலை ரஷ்யா நடத்தியது. ஒரே நேரத்தில் 120 ஏவுகணைகள், 90 […]
ஜாபர் சாதிக்கின் விறுவிறுப்பான போதை ரூட். சிக்கப்போகும் தி.மு.க. முக்கியப் புள்ளிகள்

போதை பொருட்கள் அனுப்பியதில் கிடைக்கும் பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்காக தி.மு.க.வின் முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கின் சினிமா நெட்வொர்க் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் வெளியான சூப்பர் ஹிட் படத்திற்கும் இவரது முதலீடு அதிகம் என்று சொல்லப்படுகிறது. திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் என்.ஆர்.ஐ. வின் தலைவரும், போதை மருந்து கடத்தல் மன்னனுமான ஜாபர் சாதிக் மற்றும் 11 பேரை குற்றவாளிகளாக அறிவித்து சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில், ஜாபர் சாதிக்கின் சகோதரர் […]
சென்னையில் அவசர அவசரமாக தரையிறங்கிய விமானம் !

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு இன்று மதியம் இண்டிகோ விமானம் புறப்பட்டது. விமானத்தில் 169 பயணிகள் பயணித்தனர். இதை தொடர்ந்து விமானம் நடுவானில் திருப்பதி வான் எல்லை அருகே பறந்துகொண்டிருந்தபோது திடீரென தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டது. அதனால் விமானம் அவசர அவசரமாக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியது. இந்த சம்பவத்தில் விமானத்தில் பயணித்த யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. பின்னர், பயணிகள் அனைவரையும் மாற்று விமானம் மூலம் திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் .
இயக்குநர் சுரேஷ் சங்கையா மரணத்தால் திரையுலகம் சோகம் !

‘ஒரு கிடாயின் கருணை மனு’, ‘சத்திய சோதனை’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் சுரேஷ் சங்கையா காலமானார். அவருக்கு வயது 41. யோகிபாபு நடிப்பில், “கெணத்த காணோம்’ என்ற படத்தை இயக்கி வந்த சுரேஷ் சங்கையா, அப்படத்தின் ரிலீஸுக்கு முன்பாக உடல்நலக் குறைவால் கலம்மனர் , இச்சம்பவம் தமிழ்த் திரையுலகை அதிர்ச்சியடைய செய்தது. வித்தியாசமான கதைக்களுடன் படங்களை இயக்கி தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வந்த சுரேஷ் சங்கையா. காக்கா முட்டை திரைப்பட […]
விஜய்க்கு புரிதல் இல்லை! சரமாரியாக வெளுத்து வாங்கிய சரத்குமார்!

தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்தும், அவரது செயல்பாடுகள் குறித்தும் பா.ஜ.க. நிர்வாகி சரத்குமார் முதல்முறையாக சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக்கழகத்தை தொடங்கிய விஜய், தனது உச்சபட்ச சம்பளத்தை கொடுக்கும் சினிமாவை விட்டுவிட்டு அரசியல் கட்சி தொடங்கியது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் மாவட்ட பிரமுகர்களுடன் இணைந்து மிகவும் பிரமாண்டமான முறையில் முதல் மாநில மாநாட்டையும் […]
விஜய்க்கு துரை வைகோ கொடுத்த திடீர் அட்வைஸ்!

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய்க்கு, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் மகனும், ம.தி.மு.க. முதன்மைச் செயலாளருமான துரை வைகோ முக்கியமான அறிவுரை வழங்கியுள்ளார். தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டை வெற்றிகரமான முறையில் நடத்தி முடித்த பிறகு விஜய்யின் அடுத்த நகர்வு குறித்து நிறைய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சங்கரன்கோவிலில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய துரை வைகோ, விஜய் சினிமா வானில் ஜொலிக்கும் நட்சத்திரம். அவருக்கென்று எண்ணற்ற ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் அரசியல் என்பது […]
கிண்டி மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி! கொதித்தெழுந்த உறவினர்கள்!

கிண்டி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி திடீரென்று உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கிண்டியில் செயல்பட்டு வரும் கிண்டி கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு கடந்த 13ம் தேதி விக்னேஷ் என்ற 26 வயது இளைஞர், டாக்டர் பாலாஜி ஜெகன்நாதனை கத்தியால் குத்திய சம்பவம் அரங்கேறியது. உடல் நலம் தேறிய மருத்துவர் தற்போது இயல்புநிலைக்கு திரும்பியுள்ள நிலையில் விக்னேஷ் 15 நாள் […]
சாதி சர்வாதிகாரியா சீமான்..? நெல்லை பூசலில் தாசில்தாருக்குச் சிக்கல்

சாதிவாரிக் கணக்கெடுப்பும், சமூக நீதியும் என்ற தலைப்பில் ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று பேசி வருகிறார் நாம் தமிழர் சீமான். நெல்லையில் நடந்த கூட்டத்தில் சீமானை எதிர்த்து கேள்வி கேட்ட நிர்வாகிகளை சாதியைச் சொல்லித் திட்டியதாக புகார் எழுந்துள்ளது. அதோடு, அந்தக் கூட்டத்தில் தாசில்தார் கலந்துகொண்டதும் பெரும் சர்ச்சையை எழுப்பியிருக்கிறது. திருநெல்வேலியில் நாம் தமிழர் கட்சியின் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டத்தில் சீமான் கலந்துகொண்டர். அப்போது, இந்த பகுதியில் நாடார்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் […]
29 ஜோடிகள் செய்து கொண்ட நிர்வாண திருமணம்: எங்கே தெரியுமா?

இரு மனம் இணையும் திருமணம் என்பது அவரவரின் சாதி, மொழி, இனம், மனம், நாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வெவ்வேறு வகையில் நடத்தப்படுகிறது. அதன்படி ஒவ்வொருவரின் திருமணமும் மற்றவர்களுக்கு வினோதமாக தோன்றுவதுண்டு. அவ்வளவு ஏன் இப்போதெல்லாம் திருமணம் கூட தேவையில்லை என்று சொல்லி லிவிங் ரிலேஷியன்ஷிப்பில் கூட சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஆண், பெண் திருமணம் என்பதை தாண்டி ஆண் ஆணையும், பெண் பெண்ணையும் திருமணம் செய்து கொள்கின்றனர். எனக்கு எதற்கு இன்னொரு துணை […]
தலைமறைவான கஸ்தூரி: 2 தனிப்படை அமைத்து போலீஸ் தேடுதல் வேட்டை!

தெலுங்கு மக்களை அவதூறாக பேசிய வழக்கில் தலைமறைவான கஸ்தூரியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் 2 தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பிராமணர் சமூகத்தினர் சார்பில் சென்னையில் கடந்த 3ம் தேதி நடத்தப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி, பிராமணர்களுக்கு ஆதரவாக ஆக்ரோஷமாக பேசினார். அப்போது அவர் தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக இணையத்தில் வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது. இதைத்தொடர்ந்து தெலுங்கு அமைப்பினர் மற்றும் தெலுங்கு […]

