Share via:
சென்னையில் முதல் முறையாக பன்னிரு திருமுறை திருவிழா மற்றும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரரின் திருமண விழா ஐ.எம்.பி.ஏ. ஏற்பாட்டில் வருகிற 16ம் தேதி நடைபெற உள்ளது. இவ்விழாவில் மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் 10 ஆதீனங்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது ஐ.எம்.பி.ஏ. அமைப்பின் ஏற்பாட்டில் வருகிற 16ம் தேதி சென்னையில் முதல்முறையாக பன்னிரு திருமுறை திருவிழா மற்றும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரரின் திருமண விழா நடைபெற உள்ளது.
சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே கன்வென்ஷன் சென்டரில் இவ்விழா நடைபெறும் என்று குழு நிர்வாகிகள் வாசு, ஜோதிடர் செல்வி, ஜெகதீஷ் கடவுள், முத்துக்குமார சுவாமி உள்ளிட்டோர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
மேலும் திருமுறை திருவிழா நிகழ்ச்சியில் 108 ஓதுவ மூர்த்திகள் திருமுறை இசை, மதுரை மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம், நாதஸ்வர இசை, 100 மாணவர்களின் திருமுறை இசை பாடல்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 8 மணிக்கு தொடங்கும் நிகழ்ச்சிகள் மாலை வரை நடைபெறும் என்றும் இந்நிகழ்ச்சியில் 10 ஆயிரம் அளவுக்கு மக்கள் பங்குபெறும் வகையில் அனைத்து பாதுகாப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக குழுவினர் தெரிவித்தனர். மக்களின் வசதிக்காக திருவான்மியூரில் இருந்து பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொள்ள உள்ளார் என்றும், திருவாடுதுறை ஆதீனம், தருமபுரம் ஆதீனம், மதுரை ஆதீனம், குன்றக்குடி ஆதீனம், பேரூர் ஆதீனம், மயிலம் பொம்மபுற ஆதீனம், சிரவை ஆதீனம், செங்கோல் ஆதீனம், துழாவூர் ஆதினம், வேளாக்குறிச்சி ஆதீனம் உள்ளிட்ட ஆதீனங்கள் கலந்து கொள்ள உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
Copyright © 2023. All Rights Reserved.